முடிவின் தொடக்கம் நீயே 💙 62

484 15 1
                                    

ஆரத்தி சுற்றுவதற்கு கௌரி தாம்பூலம் எடுத்து வர அவரின் தோள்பட்டையில் கை வைத்து நிறுத்தினான் அஜய் . இவ்வளவு நேரம் மகன் இல்லாதது அவர் மனதை வருத்தியது . இருந்தும் மருமகளுக்காக வாயை திறக்காமல் இருந்தார் . இப்போது அஜய் வந்ததும் அனைவருக்குள்ளும் ஒரு சந்தோஷம் வந்தது என்னமோ உண்மைதான் . " இன்னும் நான் வளையல் போடுறது பாக்கி இருக்கு " என்று தன் சட்டை பையில் அவளுக்காக வாங்கி வைத்திருந்த இரண்டு ஜோடி வைர வளையல்களை போட்டு விட்டான் .

வந்திருப்பது தன்னவன் தான் என அறிந்த போதிலும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை கயல் . எ
இத்தனை மணி நேரம் அவனுக்காக காத்திருந்த இதயம் அவன் வந்ததும் மகிழ்ந்தது என்னமோ உண்மை . ஆனால் மூளை அதற்கு எதிர் மாறாக செயல்பட அமைதியாக இருந்துவிட்டாள் . இத்தனை பேர் முன்னிலையில் அவனை திட்டி விடுவார்களோ என அனைவரும் பயந்திருக்க அவள் அமைதி சற்று நிம்மதியை கொடுத்தது .

சந்தனத்தை எடுத்து அவள் இரு கன்னத்திலும் தடவி விட்டு நெற்றியிலும் நெற்றி வகுட்டிலும் குங்குமம் வைத்து விட்டான் . அன்று அவன் தான் வரக்கூடாது என கயல் கூறியது மிகப்பெரிய வலியும் ஏமாற்றமும் கொடுத்து . இருந்தும் என்ன நடந்தாலும் இந்த விழாவில் தான் இல்லாமல் இருக்க கூடாது என்று கிளம்பி வந்து விட்டான் . பின்பு ஆலம் சுற்றி அவளை தளர்வான ஆடை உடுத்தி வர சொல்ல நிறைமாத கர்ப்பிணியாக தன்னவள் அன்ன நடையிட்டு செல்வதை ரசனையுடன் பார்த்தான் அஜய் .

" சீனியர் அது உங்க பொண்டாட்டி தான் " பாலா காதில் சொல்ல " தெரியும் நீ மூடு " என்றவன் அவளை தவிர வேறெங்கும் பார்க்க வில்லை . யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் அவளோடு பின்னாலே சென்றவன் அறைக்குள் வந்து கதவை சாற்றி விட்டான் . இதனை கௌதம் தினேஷ் இருவரும் பார்த்தும் பார்க்காதது போல இருந்துவிட்டனர் . உள்ள வந்தவனை பார்த்து கத்தி கூச்சல் போடுவாள் என்று அஜய் நினைக்க அவளோ இன்னும் அமைதியாக நின்றாள் .

" அம்மு " ஆழ்ந்த குரலில் அஜய் அழைக்க நீண்ட நாள் கழித்து அவன் குரல் கேட்டதும் அவளுக்கு கண்ணீரே வந்துவிட்டது . " நான் பண்ண போறது உனக்கு பிடிக்காது . இருந்தாலும் உன்னை அழகா பார்த்ததும் மனது கேட்க மாட்டுது "என்று அவன் கூறுவது புரியும் முன்பே அவளை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான் அஜய் . தடுக்கவும் இல்லை விலகவும் இல்லை . அவன் அணைப்பு அவளுக்கும் தேவை பட்டது போல அசையாமல் நின்று கொண்டிருந்தாள் . நீண்ட நேரம் கழித்து அவளை விட்டவன் அவள் இதழில் பட்டும் படாமல் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு நொடியும் நிற்காமல் சென்று விட்டான் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now