முடிவின் தொடக்கம் நீயே 💙 55

365 11 3
                                    

" எதுக்காக எங்க எல்லாரையும் இங்க வர சொன்ன " கயல் காணவில்லை அவளை தேடாமல் இப்படி அமர்ந்திருக்கும் தம்பியை பார்க்கவே கடுப்பாக இருந்தது ராகுலுக்கு . " ஏதோ பேச தான் வர சொன்னன்னு தெரியுதுல கொஞ்ச நேரம் அமைதியா இரு " என்றான் அஜய் . குரலில் அத்துனை சீற்றம் . " என் தங்கச்சி காணாம போய் இத்தனை மணி நேரம் ஆகுது . ஆனா உனக்கு கவலையே இல்லைல . ஏன்னா அவ தான் இப்போ உனக்கும் உன் குடும்பத்துக்கும் தேவை இல்லையே . பணக்காரங்க எல்லாம் சாதாரண ஆட்களோட சந்தோஷத்தை திருடுற ஆளுங்கன்னு நிரூபிச்சிட்டீங்க " என்று கொந்தளித்த கௌதமை பிடித்து வைத்துக் கொண்டாள் சௌந்தர்யா .

" உங்களை நம்பித்தான் அவளை இந்த வீட்டுக்கு அனுப்பி வச்சேன் . ஆனா எங்க நம்பிக்கையில மண்ண அள்ளி போட்டுட்டீங்க . அவ மேல ஏன் தான் உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு . உங்கள் தகுதிக்கு ஏத்தவ எங்க வீட்டு பொண்ணு இல்லை . ஆனா அவ வயித்துல வளர்றது உங்க குடும்பத்தோட வாரிசு தானே . எப்படிங்க ஒரு மனித தன்மை இல்லாம நடந்துக்க முடியுது . எங்கேயோ போயிருந்தா பரவாயில்லை ஆனா மனசு உடைஞ்சு தப்பான முடிவு எடுத்துட்டா என்ன பண்றது " அழுகையும் ஆத்திரமுமாய் சௌந்தர்யா கேட்டு முடிக்கவும் " அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் விடமாட்டேன் " என எழுந்து நின்றான் அஜய் .

" உன்னால் தான்டா இவ்ளோ பெரிய பிரச்சனையே . நீ என் தங்கச்சி வாழ்க்கையில மட்டும் வராமல் இருந்திருந்தா இந்நேரம் அவ எங்க வீட்ல சந்தோசமா இளவரசி மாதிரி இருந்திருப்பா . காதல் காதல்ன்னு பின்னாடி சுத்தி நீ பைத்தியமான . நீ தெளிஞ்சதும் அவ பைத்தியம் ஆயிட்டா . ஊர் முழுக்க அவளை தேடிக்கிட்டு இருந்தோம் . சீக்கிரமாவே கண்டுபிடிச்சிருப்போம் எதுக்காக எங்களை இங்க உட்கார வச்சிருக்கே " தீனேஷும் கோபத்தில் கத்த ஆரம்பித்தான் .

" போதும் .. போதும் .. நிறுத்துங்க " கத்தினான் அஜய் . " நீங்க கேக்குற எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கு ஆனா அதுக்கு கயல் இங்க வரனும். வெயிட் பண்ணுங்க " என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே வாட்ச் மேன் கயல் கொடுத்த பையுடன் உள்ளே வந்தார் .
நிலை சரியில்லை என்பதை புரிந்து கொண்டு ஓரமாக நிற்க " எதாவது வேணுமா அண்ணா " என்று ராகுல் அவரிடம் கேட்டான் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now