முடிவின் தொடக்கம் நீயே 💙 32

388 13 5
                                    

கயலை இழுத்துக் கொண்டு போகும் அஜய்யை பார்த்து மோகன் கீதா இருவரும் பதறினர்... "உங்க பையன் என்ன சொல்றாரு என் பொண்ணு அப்படி இல்ல" என்று மோகன் கத்தினார்.. கீதாவோ " அந்த பையன் நம்ம பாப்பாவ கூட்டிட்டு போறான் .. சீக்கிரம் வாங்க "என்று பதட்டத்துடன் மோகனை அழைத்தார்.. வெளியே அஜய் செல்லும் முன்னே அவனை தடுத்தான் கௌதம் .. கயல் தன் முழு பலத்தையும் பிரயோகித்து அஜய் கையில் இருந்து தன் பிடியை உருவிக்கொண்டு கௌதமை அணைத்துக் கொண்டால்...

தன் கையை உதறிவிட்டு யாரோ ஒருவன் கையை கயல் பிடித்துக் கொண்டு இருப்பதாக நினைத்த அஜய் " அம்முஊஊ" என்ற கர்ஜனையுடன் "நீ யாரையும் தொடக்கூடாது இங்க வா" என்று அவளை தன் பக்கம் இழுத்தான்.. கௌதமிற்கு அவன் செயல் அன்னியமாக தொன்றியது.. " அஜய் என்ன நினைச்சுகிட்டு இருக்க .. அவ என்னோட தங்கச்சி" என்று கோபத்துடன் சொன்னான் கௌதம் ...

சௌந்தர்யா ஏதேனும் சண்டை ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் " கயலை ஒரு கையிலும் தன் கணவனை மறுக்கையிலும் பிடித்துக் கொண்டாள்.. " எதுவாக இருந்தாலும் உள்ள போய் பேசலாம் வாங்க" என்று அழைக்க .. "இல்ல நாங்க எங்க வீட்டுக்கு போறோம் " என்று கோவமாக கயலை அங்கிருந்து அழைத்து செல்வதில்லையே குறியாக இருந்தான் அஜய்.. கயலுக்கு அவன் பாதுகாப்பின்மை உணர்வு புரிந்தது .. " நான் சொல்றதை கேளுங்க அஜய்.. எனக்கு எங்க வீட்ல கொஞ்சம் பேசணும் .. பேசி முடித்துவிட்டு நான் வரேன் .. அதுவரைக்கும் எனக்காக காத்திருக்க .. நிஜமா நான் வருவேன்" என்று கயல் உறுதியாக கூறினால்...

அவள் கண்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவன் " சரி அம்மு அதுவரைக்கும் நான் வாசல்லையே இருப்பேன்.. கண்டிப்பா நீ வரனும் " என்றான் அழுத்தமாக அவள் விலகலை பொறுக்க முடியாமல்.. அதன் பின்னர் அமைதியாக அனைவரும் உள்ளே அமர்ந்தனர்... " என்னதான் நடக்குது இங்க கயல்.. எதுக்காக கயல் அந்த பையனை தொட்டு தொட்டு பேசுற .. இவங்க சொல்றது எல்லாம் உண்மையா" என்று மோகன் அதட்டலாக கேட்டார்.. அழுகையுடன் தன் பெற்றவர்களை பார்த்த கயல் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினாள்..

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now