முடிவின் தொடக்கம் நீயே 💙 27

306 9 1
                                    

"இப்ப என் கல்யாணத்துக்கு என்ன அவசரம் அம்மா " என்று கௌதம் கத்திக் கொண்டிருந்தான்.. தினேஷ் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாட்டை உன்னிப்பாக வாயில் முணுமுணுத்து கொண்டு இருக்க ... பக்கத்தில் வாயில் பாப்கானை மென்றபடி அவனுடன் இணைந்து பாடிக்கொண்டிருந்தால் கயல் ... "கழுத வயசு ஆகுது டா உனக்கு.. இப்ப கல்யாணம் பண்ணாம எப்ப கல்யாணம் பண்ண போற .. 29 வயசு ஆகுதுடா ... இன்னமும் சின்ன குழந்தை நினைப்பா "என்று கீதா அவனை திட்ட..

கயலுக்கு அப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான் கௌதம்.. அதில் அவளுக்கு முகம் வாடி விட "பாப்பாக்கு இப்போ தானே 21 வயசு ஆகுது .. முதல்ல எருமை மாடு நீ கல்யாணம் பண்ணுடா .. அப்புறம் இவளுக்கு பாத்துக்கலாம் " என்று தினேஷ் கயலுக்கு சப்போர்ட் செய்ததும் அவனை முறைத்தவன் தங்கையை பார்த்தான்... இது எல்லாம் அவளின் லீலை தான் என்று தெரிந்ததும் "யாரு பொண்ணு "என்று அமைதியாக கேட்டான்...

"எல்லாம் நம்ம ஜோசியர் தான் எடுத்துட்டு வந்து கொடுத்தாரு ... நல்ல பொண்ணு பிஎஸ்சி முடிச்சிட்டு வீட்ல சும்மா தான் இருக்கு ... தங்கமான குணம் .. உன் ஜாதகம் கூட ஒத்து போச்சுன்னு என்கிட்ட சொல்லிட்டு இருந்தாரு ... நான் தான் எதுக்கு தள்ளி போடணும்-னு சொல்லி உடனே வரோம் என்று சொல்லிட்டேன் ... உன் தங்கச்சிக்கு தான் ஏகபோக சந்தோஷம்" என்று கூறியதும் "ஏதோ உங்க விருப்பப்படி பண்ணுங்க" என்று உள்ளே சென்று விட்டான் ...

" கேடி .. எல்லா வேலையும் செஞ்சுட்டு அமைதியா இருக்க " என்று தினேஷ் அவளிடம் கேட்க... " நம்ம வீட்ல ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடக்கணும் ... அதுக்கு தான் தினு அண்ணா" என்றவள் சந்தோஷமாக " நான் போய் ஆன்ட்டி கிட்ட சொல்ல போறேன் "என்று தினேஷ் வீட்டிற்கு ஓடினாள் ... போகும் அவளை சிரிப்புடன் பார்த்துவிட்டு கௌதமை தேடி சென்றான் தினேஷ் ... "என்னடா கல்யாணத்துக்கு ரெடியாயிட்டு இருக்கியா" என்று அவனிடம் வம்பு இழுக்க ...

"ஆமா டா மாப்பிள்ளை தோழன் நீயும் ரெடியா இரு ... இல்லை என் கூட பொறந்தது உன்னை பிடிச்சி மிதிச்சிடும்" என்றான் புன்னகையுடன்... "கண்டிப்பா அவ பண்ணினாலும் பண்ணுவா" என்றவன் "ரொம்ப நாளுக்கு அப்புறம் அவ முகத்தில் இப்பதான் சந்தோஷமே வருது" என்று சற்று மன நிம்மதியுடன் தினேஷ் .. "எனக்கு அவ உயிர் பொழச்சி வந்ததே போதும்னு இருக்கு டா "என்றான் கசந்த புன்னகையுடன் கௌதம்.. அன்று கயல் தூக்க மாத்திரையை வாயில் போட்டு நிமிர்ந்து பார்க்க கௌதம் அவள் செயலில் சிலையாகி விட்டான்...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now