அருகே வந்து நின்றவர்,"தம்பி!! நிறைய பேர் நம்மை சுத்தி இருந்தாலும் எதிர்பார்த்து ஏங்குற ஆள் கூட இல்லைனா..!!உலகமே தனிச்சு விட்டமாதிரி இருக்கும்.
நம்ம அமிர்தாம்மாக்கு அப்புறம் உங்களுக்காக!! உங்க மனசை புரிஞ்சிட்டு ,இப்படி வருந்தபடுறது , அம்ரூம்மா தான்!!
ஆனா அவங்க பயங்கற குழப்பத்திலையும் பயத்திலையும் இருக்காங்கன்னு தெரியுது! உங்க முன்னாடி நல்லா இருக்கமாறி நடந்துக்குறாங்க அவ்வளவுதான். அவங்க குடும்பத்துக்கு ஏன் தெரிய வேண்டாம்னு சொன்னாங்கன்னு தெரியுமா!!?"வெடுக்கென நிமிர்ந்த ராமன்,"தெரியாதே!!?"
சுப்பு,"உங்ககிட்ட சொல்ல வேண்டாம்முன்னு சொன்னாங்க !!எனக்கு மனசு கேட்கல உளறிட்டேன்!!நீங்களே அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க!! அவங்களுக்கு இப்போ நீங்க மட்டும் தான் உலகமே!!இன்னொரு தடவை இப்படியெல்லாம் நினைக்காதீங்க!!?" என்று சற்று வேகமாக பேசியவறை இமைக்காது பார்த்த ராமன் சற்று இடைவெளி விட்டு,"தப்பு பண்ணிட்டேன் சுப்பண்ணா..!மன்னிச்சுடுங்க!!?" என்று தணிந்து போனான்.
சுப்பு சற்று கலக்கதுடன்,"நான் தப்பா பேசியிருந்த மன்னிச்சிடுங்க தம்பி!!
அவங்கள அப்படி பார்த்தது ,எனக்கு மனசு கேட்கல!?"ராம்,"நீங்க சொன்னது எதுமே தப்பில்லை!!நான்தான் மடையன் ,புரிஞ்சிக்காம அப்படி கோபபட்டேன்!!அவ கூடவே இருக்கனுன்னு கூட்டுட்டு வந்துட்டு ,இங்க தான இருக்கான்னு அலச்சியமா இருந்துட்டேன்!!நான் என்ன பண்ணனும்னு இனிமே தெளிவா முடிவு பண்ணிக்குறேன், ரொம்ப தேங்க்ஸ் சுப்பண்ணா!!"
சுப்பு,"அய்யோ தம்பி!!நான் என்ன பண்ணனேன்,நான் சொல்ல வந்ததே வேற! ஏதேதோ சொல்லிட்டு இருக்கேன்!!நம்ம ஹாஸ்பிடல நிறைய பேர் வந்து போவாங்க தான்!ஆனா எனக்கு என்னமோ ,யாரோ அமிர்தாம்மா ரூமை சுத்தி வரமாறி தோணுச்சி!!அவங்க உடம்பும் பலகீனமாக இருக்கமாறி இருக்கு !அதை தான் சொல்ல வந்துட்டு, இப்படி எதையோ பேசிட்டு இருக்கேன்".
YOU ARE READING
இராமன் தேடிய கண்கள்
Romanceகாத்திருக்க கற்றுக்கொள்...நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
தேடல்-67
Start from the beginning