தேடல்-55

229 14 3
                                    

இருள் சூழ்ந்த பகுதியில் வெண்ணிலா கதிர்களை செலுத்தி ஒளிப்பரப்பி கொண்டிருக்க, சக்கர நாற்காலியை உறுட்டியபடி அருகே வந்த தாத்தா,"ஷானு...மா!!தெளிவா அமிர்தா என்ன சொன்னானு சொல்லுமா!!?"

ஷானு,"தாத்தா! நான் முழுசாவே சொல்லுறேன்!!ராம்... அம்ரூவுக்கு பிரெயின் டியூமர் ரா..!, அவங்க கூட வேலை பார்த்தவங்கள ஹாஸ்பிடல பார்க்க போகும் போது மயங்கி விழுந்துருக்காங்க ...! ,கொஞ்ச நேரந்துல சரி ஆகிடாங்களாம்..., ஆனா அங்க இருந்த டாக்டர் சந்தேகப்பட்டு ஸ்கேன் எடுக்க சொல்லிருக்காரு!?!.

மிதமான தென்றலிலும் குப்பென்று வியர்த்து போனது ராமனுக்கு...!. அனைவரும் ஷானுவையே உற்று நோக்க மேலும் தொடர்ந்தாள்.

ஷானு,"இவங்க முதல்ல நம்பல...!,அவங்க வீட்டில எல்லாம் ரொம்ப பயப்படுவாங்கன்னு, இவங்களே மீதி எல்லா செக்கப் பண்ணிருக்காங்க ....!!,எல்லாமே பசிடீவ்...!!,இருக்குன்னு கன்பார்ம் ஆனதும்...!!,டாக்டர் கிட்ட மெடிசின்லியே... , சரி பண்ணிரலாமானு கேட்டுருக்காங்க!! ஆனா அவரு நான் பிரெயின் ஸ்பெஷலிஸ்ட் இல்லமா!!ஸ்பெஷலிஸ்ட்போயி பாருன்னு சொல்லிருக்காரு!!?

படபடவென ஆனது ராமனுக்கு அவனை புரிந்து கொண்ட கிரண் அருகில் சென்று சற்று கையை பிடிக்க உடைந்து போனான் ராமன்.வேணு தாத்தா இதனை நோக்க..,இவர்களை கண்ட ஷானு அருகில் வந்தவள் ,"ராம் ...!!ஏன் உனக்கு .... !! பதட்ட படாத ராம்!! நான் சொல்லுரதை முழுசா கேளு!!?பர்ஸ்ட் ஸ்டெஜ் தான் ராம் !!சரி பண்ணிடலாம்! உனக்கு தெரியாதது இல்ல !?? முதல்ல மாறி இல்லல இப்போ டெக்னாலஜிலாம்..!! எங்க ஹாஸ்பிடல் அதுக்கு ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்களே!!"

கிரண்,"என்ன... ஷானு !!இவ்வளவு சாதாரண மா சொல்லுற!?".

ராம் சற்று சுதாரித்தவனாய் ,"யாரு ஷானு!!?எனக்கு அவ ரிப்போர்ட்ஸ் லாம் வேணுமே!?"

ஷானு,"ராம்... !!மீதி சொல்லுரதையும் கேளு ...நான் முடிச்சிடுறேன்...! நீ கேட்கறது எல்லாதுக்கும் பதில் சொல்லுறேன் !!நீ முதல்ல இப்படி வந்து உட்காரு!! என்றவள் மேலும் தொடர்ந்தாள்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now