கண்களை கசக்கியபடி கதவை திறக்க , பலவித கலவர முகத்துடன் நின்றிருந்தான் கிரண்.
ஏன் கிரண் ...என்ன அவசரம் அப்படி!! ...இப்படி தட்டுற... நைட்டு தூங்க லேட் ஆகிடுச்சு அதான்..... என மிதமாக கூறிய ராமனிடம் என்ன சொல்லுவதென்றே தெரியாமல் கிரண் திணறி நின்றான்.
என்ன கிரண் !!?அப்படி தட்டுன கதவை.... இப்போ அசையாம நிற்குற!!!,ராம்.
வந்து .... ராம்....!!! நம்ம பிரண்டஸ் லாம் வந்துடாங்க கீழ இருக்காங்க என்றவனிடம், அதன ...சரிசரி.. அதுக்கு ஏன் கிரண் இப்படி நடுங்குற!! இப்போ தான் எழுச்சேன் !!! பிரஷ்அப் ஆகிட்டு கீழ வரேன் என கதவை சாற்ற முற்ப்பட வந்து..... ராம்... இன்னும் இரண்டு பேர் வந்துட்டு இருங்காங்க என்று அசையாமல் நிற்க, ஓஓ.. யாரு வந்துருக்கா அப்போ...?
தீபக் ,கிஷோர்,பிரதீக்,ஷானு லாம் வந்துட்டாங்க.... ஆரவும் ரியாவும் வந்துட்டு இருங்காங்க என்றான்.
சரி..சரிடா..நீ போ!!கிளம்பி.. நான் கீழ வரேன் !! என கதவை சாற்றினான்.
அப்பாடா !! என்று பெருமூச்சு விட்டபடி நேரே பாத்ரூமை அடைந்தான்.
உள்ளே சுற்றும் முற்றும் தேடியவன் ,கண்களை பொத்தியவாறு சுவரோடு ஓரமாய் நின்றிருந்தாள் அம்ரூ.சிரித்தபடி அவள் அருகே சென்று சுவற்றில் கையை ஊன்றியபடி நிற்க ... சத்தம் கேட்டு மெல்ல கைளை விளக்கியவள் ராமன் மிக நெருக்கமாக நிற்பதை உணர்ந்தாள்.
புன்னகை பூத்தபடி நின்றவனிடம், மிக மெல்லிய குரலில் ,"கிரண் போயிட்டாரா...?!உள்ள இருக்காரா..?! என்றாள்.
அவன் போயிட்டான் எப்போவோ !!உனக்கு தான் என்னை விட்டு போக மனசு வரலை போல...!!! என்றான்.
மிக அருகாமையில் நின்றவனை தள்ளியபடி,அப்படி ஒன்னும் இல்லையே...!! என்று நகர்ந்தவளின் கைகளை பற்றி நிறுத்தியவனிடம்..,"என்ன பண்றீங்க..விடுங்க கையை...நாலு நாள்ல கல்யாணம் உங்களுக்கு... யாராது பார்த்த... என்ன நினைப்பாங்க விடுங்க... என்று இழுக்க முற்பட
பற்றியவனின் கைகள் அவ்வளவு எளியானவை என்ன!!?
YOU ARE READING
இராமன் தேடிய கண்கள்
Romanceகாத்திருக்க கற்றுக்கொள்...நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.