தேடல்-65

254 14 7
                                    


மீரா,"ஹலோ..மேடம்!!கிரண் சார் போயிட்டாரா!!?"

அம்ரூ,"வாங்க மீரா!!ஆமாம் ...!நீங்க வந்துடுவீங்கன்னு...!அப்பவே அனுப்பிட்டேன்!!"

மீரா,"சாரி ..!!சாரி...மேடம்!!கொஞ்சம் லேட் ஆயிடுச்சி இன்னிக்கு!!"

அம்ரூ,"அதனாலென்ன... மீரா, பரவாயில்லை!!"

மீரா தன் பணிகளை வேகமாக செய்ய அம்ரூ மெல்ல,"மீரா!!நேத்தி அவருக்கிட்ட சொல்ல மறந்துட்டீங்க போல!!???"

மீரா,"என்னது?மேடம்?!!!"

அம்மா,"அதான்!!அவரை வர சொல்லி‌ சொல்ல சொன்னேன்ல!சொன்னீங்களா!!?"

மீரா,"ஓஓஓ ..!!!,சொல்லிட்டேன்!!, உடனே சொல்ல முடியல மேடம்!,ராம் சார், ஒரே பிஸியாவே இருந்தாரு, அவரு கூடவே யாராது இருந்திட்டு இருந்தாங்க!!ஆனா நடுவுல அவரு கெஸ்ட்க்கு காஃபி கொடுக்க போனப்போ,'அவசரமில்லை நேரம் கிடைக்கிறப்போ, அமிர்தா மேடம் வர சொன்னாங்கன்னு சொல்லிட்டேனே!!'
சார், நேத்தி வரலையா!! மேடம்!!?"

அம்ரூவிற்கு பொத்து கொண்டு வர கட்டுபடுத்தியவள்,"ஆமா மீரா!!சாரு பிஸி , நேரா வீட்டுக்கு போயிட்டாரு போல,கிரண் தான் சொன்னாரு!!ஒருவேளை நீங்க வேலைல சொல்லாம மறந்துட்டீங்கன்னு நினைச்சேன்!!"

மீரா,"இல்ல மேடம்!!நான் சொல்லிட்டு தான் வீட்டுக்கே போனேன்!,கிரண் சார் சொன்ன மாறி வேலை ஜாஸ்தி ,அதுல மறந்துட்டு போயிருப்பாரு!!இப்ப வந்துடுவாரு!!"
என்றபடி வெளியேற புன்னகைத்த அம்ரூ,"வரட்டும்..இருக்கு அவருக்கு..!, பாத்துக்கறேன்!!" முணுமுணுக்க உள்ளே நுழைந்தாள் ஜானு.

அம்ரூ,"என்ன ஜானு காலையிலே வந்துட்ட ...,நீ மட்டும் தான் வந்துருக்கியா!!?" என்ற சமயம் சடசடவேன பலர் நுழைந்தனர்.

அம்ரூ,"திவீ..!!,பாட்டி!அம்மா!!குரு அண்ணா!!?" அதிர்ச்சியில் உறைந்தாள் அமிர்தா.

சுமி பாட்டி,"என்னடி!!வாயாடி,எப்படி இருக்கு இப்போ!?டில்லி வந்து இந்த பாட்டிய மறந்துட்டல!!?" என்ற சமயம் எழந்து சென்று பாட்டியை அணைத்து கொண்டாள் அமிர்தா.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now