தேடல்-66

183 11 0
                                    


கிரணின் பின்னே நாராயணன் மற்றும் குருவுடன் மிதவயதுடையவர் நுழைய ,முன்னே வந்தவர்கள் சேர்ந்து கொள்ள, அவரோ ராமனை கண்டு புன்னகைத்தபடி வந்து கைகூலுக்கினார்.சிறிது நேரத்தில் ஹாஸ்பிடல் டாக்டர்ஸூடன் பிரக்கரும் வந்து சேர அறை நிரம்பி வழிந்தது.

அவர்களின் உரையாடலை அமிர்தாவின் குடும்பத்தினர் வித்தியாசமாக பார்த்து கொண்டிருந்தனர்.அவ்வப்போது தன்னை பார்த்து சிரித்த அந்த வெளிநாட்டவரை பார்த்து செய்வதறியாது அசட்டை சிரித்து கொண்டிருந்தாள் அமிர்தா.உரையாடல் நிறைவுற்று கிளம்பும் தருவாயில் அவர் அமிர்தாவின் தலையில் கைவைத்து ஏதோ கூறிவிட்டு ராமனை கட்டிணைத்திட்டவர் ராமனுடன் வெளியேற அவருடன் அனைவரும் வெளியேறினர்.

சுமி பாட்டி,"அப்பா.. டா... !!அறையே மழைவிட்டு ஓய்ந்தமாறி இருக்கு!!ஆமா அமிர்தா...!!எனக்கு ஒரு சந்தேகம் ,இப்போ இந்த வெளிநாட்டுகாரு ஏன் உன்னையே வந்து பார்த்துட்டு போறாரு!!??"

அம்ரூ,"பாட்டி!!எனக்கு மட்டும் எப்படி தெரியும் !!நானும் உங்களை மாறித்தான....!, ஒன்னும் புரியாம வெறிச்சு பார்த்துட்டு இருந்தேன்!!"

சுமி,"அதுவும் சரி தான்!!.."

திவ்யா,"பாட்டி!!அதை விடுங்க அவருதான் ராமனாமே!!இதை தெரியாம நாம வேற பேசிட்டோமே!!?"

சுமி பாட்டி கண் பிரகாசமாக "அட !!ஆமா ல ..விடு திவீ..,அவங்களுக்கு தான் நாம பேசனது புரியாதே!!இப்போ என் கவலை எல்லாம்,என் ராமனை இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்க விடமா வந்து கூடவே கூட்டிட்டு போயிட்டாரே....!!,எனக்கு இந்த வெளிநாட்டுகாரனையே பிடிக்கலை‌!!!இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன?!!"என்று பாட ஆரம்பிக்க

அம்ரூ ,"பாட்டி போதும்.., இதோட நிறுத்திகோங்க!!இல்லைனா பின்னாடி ரொம்ப வறுத்தபடுவீங்க?!"

சுமி பாட்டி எழுந்து சற்று மெதுவாக ஆடியபடி,"அட..!போடி...!, இதுக்கு மேல, எனக்கு வேற என்ன இருக்கு !!?," என்ற சமயம் மறுபடி உள்ளே வந்தனர் கிரணும் நண்பர்களும்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now