தேடல்-59

204 13 0
                                    

ஏன் இங்க இவ்வளவு கூட்டம்,பேஷண்ட்டை தொந்தரவு பண்ண கூடாதுன்னு தெரியாதா!!? என்ற குரல் வந்த திசையில் வெள்ளை நிற கோட் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் அணிந்து நின்றிருந்தான் ராமன்.

மேகா,"வாப்பா !!உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்!!

அனைவரும் ஆவலுடன் வரவேற்க ,
"பாட்டி!!!பார்த்தாச்சா!!?திருப்தியா!!?
நான் பாத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் !அங்க வச்சி மீதியா பேசிக்கலாமா!?" என்றவனிடம் கட்டிலை விட்டு எழுந்தபடியே ,
"இவன் இருக்கானே!!திருப்தியா பார்த்துட்டேன்!!, மீதியை எப்படி பேசிக்கனுமோ, அப்ப பேசிக்கிறேன்" என்றபடி அம்ரூவின் அருகே சென்று அவர் கையிலிருந்த பையிலுள்ள குங்குமத்தை நெற்றியில் இட்டபடி ஆண்டவன் எப்பவும் துணையாவே இருப்பான் என்று ஆசீர்வதிக்க பணிவாக அமர்ந்திருந்தாள் அம்ரூ!.

குடும்பத்தார் அனைவரும் வெளியேற, நண்பர்களை அவன் அறையில் சென்று காத்திருக்க சொல்ல, அவர்களும் ஒருவர் பின் ஒருவராய் சென்றனர்.

கிரண் மட்டும் இருக்க உள்ளே நுழைந்த நர்ஸிடம் ராம்,"நீங்க கூட்டிட்டு போங்க !!டெஸ்ட் எல்லாம் முடிசிட்டு வந்ததும் ,எனக்கு உடனே இன்பர்ம் பண்ணுங்க!!சரியா!!?" என்றவன் கிரணை நோக்கி," நமக்கு ஒரு வேலை இருக்கு கிரண் ...வரீயா!!.. வேற எதும் வேலை இருக்கா!!?"

கிரண்,"அதெல்லாம் இல்ல ராம்!!அம்ரூ கூட போக வேண்டாமா!?"

ராம்,"அதெல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க !!நீ வா !!"என்றபடி
அவனுடன் வெளியேற அம்ரூவிற்கு பொத்துகொண்டு வந்ததது.

எதும் பேசாமல் அமர்ந்திருந்தவளிடம் அந்த நர்ஸ்,"மேடம் ...!என்னைய தெரியுதா!!?" என்றபடி கையிலிருந்த பேக்கை நீட்ட அம்ரூ யூகித்தவள்,"ம்ம்ம்... நாம அன்னிக்கு அமித்தை பார்க்க வந்தப்போ பேசனோம் தான!!?"என்றாள் உற்சாகமாக..

நர்ஸ்,"பரவாயில்ல மேடம் ..!ஞாபகம் வச்சிருக்கீங்களே!!?இந்த டிரஸ் மாத்திக்கோங்க !!நாம டெஸ்ட் எடுக்க போலாம் !!"

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now