தேடல்-61

276 14 3
                                    

சத்தம் கேட்டு கண்விழித்தவள் தன்னருகில் ராமன் இல்லாததை உணர்ந்தாள்.ஷோபாவில் அமர்ந்திருந்த கிரணிடம்,"கிரண் !! நீங்க எங்போ வந்தீங்க!!?அவரு எங்க!?"

கிரண் வந்த சிரிப்பை கட்டுபடுத்தியபடி,"நான் இப்போதான் வந்தேன்.அண்ண நான் வந்ததும் கிளம்பி போயிட்டாரு..... "அண்ணி"...".என்று கூற சட்டென நிமிர்ந்தாள் அமிர்தா.

அம்ரூ,"இப்போ என்ன சொன்னீங்க!!?"

கிரண்,"அண்ண கிளம்பி போயிட்டாருன்னு சொன்னேன்!!"

அம்ரூ ,"அப்புறம் ஏதோ சொன்னீங்களே!!"

கிரண்,"அப்புறம் ...ஒன்னும் சொல்லலியே!!"

அம்ரூ தான் தூக்க கலக்கத்தில் இருப்பதாய் எண்ணி பாத்ரூம்மிற்கு செல்ல !!,வெளியே வந்து தண்ணீர் அருந்தியவளிடம் "சாப்பிடறீங்களா... அண்ணி!! நர்ஸ் நீங்க எழுந்ததும் கூப்பிட சொன்னாங்களே!!"என்றான்.

திடுக்கிட்டு திரும்பியவளுக்கு புரையேறி போக அருகில் சென்று தலையை தட்டியவன்,"பார்த்து அண்ணி !!மெல்ல மெல்ல !!எனவும் குழம்பினாள் அம்ரூ.

தன்னிலை வந்தவள்,"கிரண்!!என்னைய என்னனு கூப்பிடுறீங்க!!"

கிரண்,"அண்ணி னு தான்!!" என்று சாதரணமாக தோள்களை குலுக்கினான்.

அதிர்ந்த அம்ரூ,"ஏன் கிரண்!? என்ன இது தீடீருன்னு ...! புதுசா!!?"

கிரண்,"அதாவது அண்ணி!!அதான முறை!!நான் தான் ஞாபகம் இல்லாம பெயர் சொல்லி கூப்பிட்டனா!!நீங்களாது சொல்லியிருக்க வேணாமா!!?" என்றான் புன்னகை பூக்க

அம்ரூ,"கிரண் !!சும்மா விளையாடாதீங்க !!என்னைய எப்படி கூப்பிட்டீங்களோ .....அப்படியே கூப்பிடுங்க ....இப்படி புதுசாலாம் வேணாமே...ப்ளீஸ்!!"

கிரண்,"அதெல்லாம் சரி வராது ...,அண்ணி!!அப்புறம் ராம் எப்படி நீ பெயர் சொல்லி கூப்பிடலானு கேட்டாலும் கேட்பான் !!ராம் சொல்லுறதுக்கு முன்னாடியே நான் கூப்பிடறது தான் சரி !!அதனால இனிமே "அண்ணி"..தான்!!"

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now