ராம்,"எங்க வந்துட்டு இருக்காலாம் குரு....!!!"இதயம் படபடக்க உள்ளே நுழைய அவர்களை வரவேற்படி எதிரே வந்தவன்,"பக்கதுல வந்துட்டா... டிரைவர் வேற தெருல போயிட்டாரு போல ... இப்போ சுத்திட்டு வந்துட்டு இருக்காரு .. நீங்க உள்ள வாங்க!!" என்றான் குரு.
இருவரும் உள்ளே நுழைய
கிரண்,"சரி.. அம்மா ..பாப்பா லாம் எங்க காணோம்!!?".குரு,"நான் தான் இரண்டு பேரையும் வெளியே அனுப்பிருக்கேன்! டா!, சரி சரி... நீங்க இரண்டு பேரும் இந்த ரூம்ல .. இருங்க.. !!,
நாங்க சொல்லும் போது வரலாம்!!"கிரண்,"நாம ஏன் ஒளிஞ்சிகறோம்...!! வந்ததும் பார்த்தா.. ,எவ்வளவு சந்சோஷ படுவாங்க..!!,நாங்க இங்கேயே வெயிட் பண்றோம்!!" என்றபடி ஹாலில் இருந்த ஷோபாவில் சென்று அமர்ந்தான்.
குரு விழித்தபடி ராமனை பார்க்க
ராம்,"அவனுக்கு எதும் தெரியாது... அதான்!!.,. சரி...நீ அவ எப்படி பேசறானு பாத்துட்டு..,முதல எங்க தங்கி இருக்கா... ,என்ன பிரச்சினைனு விசாரி...!!,அவ எதுவுமே சொல்லாம கிளம்பற தெரிஞ்ச ... நான் பாத்துக்குறேன்!!" என்றவனுக்கு தலையை ஆட்ட காலிங் பேல் சத்தம் கேட்டது,"அவ வந்துட்டா!! நீங்க உள்ள போங்க" என்றவனின் கையை பிடித்த ராமன்,"குரு.. இந்த ரூமேலேருந்து இங்க பார்க்க முடியுமா!!" என்றான் பாவமாக.அவனின் நிலையை கண்ட குரு," அந்த ரூம்ல சன்னல் இருக்கு ...ராம்,லைட்டா திறந்தா இங்க தெரியும்... "என்றபடி நகர முயன்றவனின்... கையை மறுபடிபிடித்தவன்,"உன்னை நம்பிதான் இருக்கேன் குரு..!! பார்த்து!!"அவனின் கைமேல் கை வைத்தவன் நம்பிக்கையுடன்,"நான் பார்த்துக்குறேன் ராம்!!" என்றபடி செல்ல புரியாமல் விழித்த கிரணை தரதரவென இழுத்தபடி உள்ளே சென்றான் ராமன்.
மாதங்கள் பல கடந்ததாலும், மனம் உருகி உருகி தேடியதாலோ என்னமோ...!!, உடல் முழுதும் சிறிது நடுக்கத்துடன் சன்னல் இடுக்கில் கண்களை பதித்தவன் ஆடாமல் அசையாமல் வருகையை எதிர்நோக்கி அமர்ந்திருந்தான்.
KAMU SEDANG MEMBACA
இராமன் தேடிய கண்கள்
Romansaகாத்திருக்க கற்றுக்கொள்...நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.