பாட்டியை கண்ட கிரண்,"என்ன பாட்டி!!ஒரே சந்தோஷமா இருக்கீங்க போல!!?"
பாட்டி சற்று மெல்ல போய் அமர்ந்தபடி,"ஆமாம்!!பின்ன இருக்காதா!!?"
கிரண்,"என்னனு விஷயமுன்னு சொன்னா!?நாங்களும் சந்தோஷ படுவோமே!!?"
பாட்டி புன்னகை செய்தபடி,"இன்னைக்கு என்னோட ராசிபலன்ல அதிஷ்டமுன்னு சொன்னாங்க!!ஆனா இப்படி அடிக்குன்னு எதிர்பார்க்கலை !!அதை நினைச்சு தான் ..!!இப்படி!, அதெல்லாம் உனக்கு சொன்னா..புரியாதுப்பா..!,"என்றவரை புரியாமல் கிரணும் குருவும் பார்க்க கிஷோரும் பிரதீக்கும் ஒருவரை ஒருவர் கண்டு புன்னகை செய்து கொண்டனர்.
இதற்கிடையில்
திவீ திரும்பி,"கிரண் அண்ணா!!இன்னைக்கு, இவ்வளவு தானா!!வேற யாரும் வருவார்களா!!?"கிரண்,"அவ்வளவு தான்ம்மா!!ஏன் இப்படி கேட்கிற!!?"
திவீ,"வருவாங்கன்னா..!இருக்கலாம் ..!இல்லனா..!கிளம்பலானு இருக்கோம்..!"
கிரண்,"அதெல்லாம்.. பரவாயில்லை மா..!நீங்க கிளம்பறதுன்னா..!கிளம்புங்க...!நாங்க இருக்கோம்ல !! பார்த்துக்கோறோம்!!அதோட அந்த டாக்டரை வழியனுப்பிட்டு ராம் வரேன்னு சொன்னான்!!அதனால பிரச்சினை இல்லை!!நீங்க கிளம்புங்க!!"
இதனை கேட்ட அம்ரூ "தட்" என தன் தலையில் அடித்தபடி 'அப்போ இவங்க கிளம்பனமாதிரி தான்' என குனிய ,அந்த இருவரின் கண்கள் பிரகாசமாகியது.
அச்சமயம் உள்ளே வந்த நாராயணன்
செய்வதறியாது திருதிருவென விழித்தபடி ஓரமாக அமர்ந்திருந்த ஜானுவிடம்,"சுவாதி எங்க காணோம்? "என்று கேட்கஜானு,"அவங்க அங்க விஸிட்டர் ரூம்ல இருக்காங்க?!இங்க ஒரே கூட்டமா இருந்ததுன்னு, நான் அங்க போறேன்னு போனாங்க!,நான்தான் உட்கார வச்சிட்டு வந்தேன்..அங்கிள்!!"
சிறிது நேரத்தில் ராமனும் பிரக்கரும் வந்து நுழைய பதட்டத்துடன் அருகே சென்ற நாராயணன்,"என்ன டாக்டர்!?எதாவது பிரச்சனையா.. வெளிநாட்டு டாக்டர்லாம் வந்து பார்க்கறாங்களே"
YOU ARE READING
இராமன் தேடிய கண்கள்
רומנטיקהகாத்திருக்க கற்றுக்கொள்...நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
தேடல்-66
Start from the beginning