அம்ரூ ,"ம்ம்.. ஐந்து நிமிஷத்தில வந்துடுறேன்!!" மாற்றி கொண்டு வர வில் சேர் எடுத்து வைத்திருந்தார் அந்த நர்ஸ்.

அம்ரூ,"நான் நடந்தே வரவா!!?"

நர்ஸ்,"இல்ல மேடம்!!உங்களை நடக்க விட கூடாது!! வாங்க நான் பார்த்துக்குறேன்!!"

அம்ரூ சென்று அமர,"நாம எங்க போறோம் !!என்ன டெஸ்ட் எடுக்கனும் !!?"என்றாள் .

அவர் உறுட்டியபடி "மேடம் இன்னொரு 'எம் ஆர் ஐ' ஸ்கேன் எடுக்க சொல்லிருக்காங்க ,த்ரிடி வியூவிங்கு அப்புறம் இஇஜி எடுக்கனுமுன்னு சொல்லிருக்காங்க!!?" என்று
அடுக்க அம்ரூ ஏதோ புரிந்து கொண்டவள் போல் தலையாட்ட எம்ஆர்ஐ அறைக்கு சென்றனர்.

அங்கு ஒருவருக்கு முன்னே செய்து கொண்டிருக்க இன்னொருவரும் நிற்க இவரை வெயிட் செய்ய சொன்ன டெக்னிஷியனிடம் நர்ஸ் காதில் ஏதோ கிசுகிசுக்க அவர் புரிந்து கொண்டவர் போல், அவரை இறக்கி இவரை சென்று படுக்க சொன்னார்.

அம்ரூவிற்கு வித்தியாசமாக தோன்ற முடித்துவிட்டு வந்தவள் அடுத்த டெஸ்ட்டுக்கு போகும் வழியில் ,"என்ன சொன்னீங்க !!உடனே அவங்க நம்மளை விட்டாங்க !!என்றாள்.

நர்ஸ்,"மேடம்!!நீங்க விவிஐபி பேஷண்ட் னு சொன்னேன்!!"

அம்ரூ சிரித்தபடி,"அப்படின்னு யாரு சொன்னா!!?"என்றாள் தான் தற்போது யார் என்பதை மறந்து.

நர்ஸ்,"ஏன் சிரிக்கறீங்க!! இதை யாராவது சொல்லனுமா!!? எங்க டீன் வந்து நேரடியா பார்க்கறாங்கனாலே!! நீங்க விஐபி தான்!! ஆனா உங்க ரூம்ல அவரு பேமிலியே இருக்காங்கனா!!? நீங்க விவிஐபி தான...!!" என்றவரை ஆர்வமாய் பார்த்தவள், சரி போலாம்!! என்றாள் பதிலேதும் பேசாமல்.

இப்படி பொழுது மெல்ல கடந்து செல்ல அவள் அறைக்கு பல பேர் வந்து சென்றனர்.இடையில் ஒருமுறை ராமன் வர , சில வினாடியில் அவரை அழைத்து செல்ல ஆள் வந்தனர்.கிரணும் காலையில் பேசியதிலிருந்து குழப்பத்திலிருக்க அவ்வபொழுது வந்து விசாரித்து செல்ல.,அவர்கள் பேசியதை புரியாமல் போனாலும் சில வார்த்தைகளை வைத்து தனது ஆப்பரேஷனை தள்ளி வைத்து இருக்கிறார்கள் என புரிந்து கொண்டாள் அமிர்தா!.

இராமன் தேடிய கண்கள்حيث تعيش القصص. اكتشف الآن