இராமன் தேடிய கண்கள்

By Gayathrisivak

22.3K 1K 102

காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்க... More

தேடல்-1
தேடல்-2
தேடல்-3
தேடல்-4
தேடல்-5
தேடல்-6
தேடல்-7
தேடல் -8
தேடல்-9
தேடல்-10
தேடல்-11
தேடல்-12
தேடல் -13
தேடல்-14
தேடல்-15
தேடல்-16
தேடல்-17
தேடல்-18
தேடல்-19
தேடல் -20
தேடல் -21
தேடல் -22
தேடல் -23
தேடல் -24
தேடல்-25
தேடல் -26
தேடல் -27
தேடல் -28
தேடல் -29
தேடல் -30
தேடல் -31
தேடல்-32
தேடல் -33
தேடல்-34
தேடல்-35
தேடல் -36
தேடல்-37
தேடல்-38
தேடல்-39
தேடல்-40
தேடல் -41
தேடல் -42
தேடல் -43
தேடல் - 44
தேடல்-45
தேடல்-46
தேடல்-47
தேடல்-48
தேடல்-49
தேடல்-50
தேடல்-51
தேடல்-52
தேடல் -53
தேடல்-54
தேடல்-55
தேடல்-56
தேடல் -57
தேடல்-58
தேடல்-59
தேடல்-60
தேடல்-61
தேடல்-62
தேடல்-63
தேடல்-64
தேடல்-65
தேடல்-67
தேடல்-68

தேடல்-66

198 11 0
By Gayathrisivak


கிரணின் பின்னே நாராயணன் மற்றும் குருவுடன் மிதவயதுடையவர் நுழைய ,முன்னே வந்தவர்கள் சேர்ந்து கொள்ள, அவரோ ராமனை கண்டு புன்னகைத்தபடி வந்து கைகூலுக்கினார்.சிறிது நேரத்தில் ஹாஸ்பிடல் டாக்டர்ஸூடன் பிரக்கரும் வந்து சேர அறை நிரம்பி வழிந்தது.

அவர்களின் உரையாடலை அமிர்தாவின் குடும்பத்தினர் வித்தியாசமாக பார்த்து கொண்டிருந்தனர்.அவ்வப்போது தன்னை பார்த்து சிரித்த அந்த வெளிநாட்டவரை பார்த்து செய்வதறியாது அசட்டை சிரித்து கொண்டிருந்தாள் அமிர்தா.உரையாடல் நிறைவுற்று கிளம்பும் தருவாயில் அவர் அமிர்தாவின் தலையில் கைவைத்து ஏதோ கூறிவிட்டு ராமனை கட்டிணைத்திட்டவர் ராமனுடன் வெளியேற அவருடன் அனைவரும் வெளியேறினர்.

சுமி பாட்டி,"அப்பா.. டா... !!அறையே மழைவிட்டு ஓய்ந்தமாறி இருக்கு!!ஆமா அமிர்தா...!!எனக்கு ஒரு சந்தேகம் ,இப்போ இந்த வெளிநாட்டுகாரு ஏன் உன்னையே வந்து பார்த்துட்டு போறாரு!!??"

அம்ரூ,"பாட்டி!!எனக்கு மட்டும் எப்படி தெரியும் !!நானும் உங்களை மாறித்தான....!, ஒன்னும் புரியாம வெறிச்சு பார்த்துட்டு இருந்தேன்!!"

சுமி,"அதுவும் சரி தான்!!.."

திவ்யா,"பாட்டி!!அதை விடுங்க அவருதான் ராமனாமே!!இதை தெரியாம நாம வேற பேசிட்டோமே!!?"

சுமி பாட்டி கண் பிரகாசமாக "அட !!ஆமா ல ..விடு திவீ..,அவங்களுக்கு தான் நாம பேசனது புரியாதே!!இப்போ என் கவலை எல்லாம்,என் ராமனை இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்க விடமா வந்து கூடவே கூட்டிட்டு போயிட்டாரே....!!,எனக்கு இந்த வெளிநாட்டுகாரனையே பிடிக்கலை‌!!!இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன?!!"என்று பாட ஆரம்பிக்க

அம்ரூ ,"பாட்டி போதும்.., இதோட நிறுத்திகோங்க!!இல்லைனா பின்னாடி ரொம்ப வறுத்தபடுவீங்க?!"

சுமி பாட்டி எழுந்து சற்று மெதுவாக ஆடியபடி,"அட..!போடி...!, இதுக்கு மேல, எனக்கு வேற என்ன இருக்கு !!?," என்ற சமயம் மறுபடி உள்ளே வந்தனர் கிரணும் நண்பர்களும்.

பாட்டியை கண்ட கிரண்,"என்ன பாட்டி!!ஒரே சந்தோஷமா இருக்கீங்க போல!!?"

பாட்டி சற்று மெல்ல போய் அமர்ந்தபடி,"ஆமாம்!!பின்ன இருக்காதா!!?"

கிரண்,"என்னனு விஷயமுன்னு சொன்னா!?நாங்களும் சந்தோஷ படுவோமே!!?"

பாட்டி புன்னகை செய்தபடி,"இன்னைக்கு என்னோட ராசிபலன்ல அதிஷ்டமுன்னு சொன்னாங்க!!ஆனா இப்படி அடிக்குன்னு எதிர்பார்க்கலை !!அதை நினைச்சு தான் ..!!இப்படி!, அதெல்லாம் உனக்கு சொன்னா..புரியாதுப்பா..!,"என்றவரை புரியாமல் கிரணும் குருவும் பார்க்க கிஷோரும் பிரதீக்கும் ஒருவரை ஒருவர் கண்டு புன்னகை செய்து கொண்டனர்.

இதற்கிடையில்
திவீ திரும்பி,"கிரண் அண்ணா!!இன்னைக்கு, இவ்வளவு தானா!!வேற யாரும் வருவார்களா!!?"

கிரண்,"அவ்வளவு தான்ம்மா!!ஏன் இப்படி கேட்கிற!!?"

திவீ,"வருவாங்கன்னா..!இருக்கலாம் ..!இல்லனா..!கிளம்பலானு இருக்கோம்..!"

கிரண்,"அதெல்லாம்.. பரவாயில்லை மா..!நீங்க கிளம்பறதுன்னா..!கிளம்புங்க...!நாங்க இருக்கோம்ல !! பார்த்துக்கோறோம்!!அதோட அந்த டாக்டரை வழியனுப்பிட்டு ராம் வரேன்னு சொன்னான்!!அதனால பிரச்சினை இல்லை!!நீங்க கிளம்புங்க!!"

இதனை கேட்ட அம்ரூ "தட்" என தன் தலையில் அடித்தபடி 'அப்போ இவங்க கிளம்பனமாதிரி தான்‌' என குனிய ,அந்த இருவரின் கண்கள் பிரகாசமாகியது.

அச்சமயம் உள்ளே வந்த நாராயணன்
செய்வதறியாது திருதிருவென விழித்தபடி ஓரமாக அமர்ந்திருந்த ஜானுவிடம்,"சுவாதி எங்க காணோம்? "என்று கேட்க

ஜானு,"அவங்க அங்க விஸிட்டர் ரூம்ல இருக்காங்க?!இங்க ஒரே கூட்டமா இருந்ததுன்னு, நான் அங்க போறேன்னு போனாங்க!,நான்தான் உட்கார வச்சிட்டு வந்தேன்..அங்கிள்!!"

சிறிது நேரத்தில் ராமனும் பிரக்கரும் வந்து நுழைய பதட்டத்துடன் அருகே சென்ற நாராயணன்,"என்ன டாக்டர்!?எதாவது பிரச்சனையா.. வெளிநாட்டு டாக்டர்லாம் வந்து பார்க்கறாங்களே"

பிரக்கர்," அந்தெல்லாம் ஒன்னும் இல்லை சார்!!நீங்க பயப்படாதீங்க!!"

பயம் தாளாத நாராயணன்,"எதாவது இருந்த சொல்லிடுங்க!!?"

அருகே வந்து அவரின் கையை பிடித்த ராமன்,"நான் தான் சொன்னேன்ல.. அமிர்தா என் பொறுப்புன்னு!!அப்படி எதும் நடக்க நான் விடமாட்டேன்!!அப்புறம் வந்தவரு ,என்னோட பழைய பிரண்டு !!எனக்கு குரு மாதிரி!!என்னை பார்க்க வந்தாங்க!!அவரும் பிரெயின் ஸ்பெஷலிஸ்ட், அமிர்தா பத்தி பேச்சு வந்ததும்,நான் வந்து பார்க்கறேன்னு சொன்னாரு
அவ்வளவு தான்!! நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதீங்க!!"

நாராயணன் பெருமூச்சு விட்டபடி,"இப்போ தான் எனக்கு உயிரே வருது தம்பி!!நிறைய பேர் வந்து பார்க்கவும் என்னவோ ஏதோன்னு பயத்துட்டேன்!!அப்புறம் பாப்பாவுக்கு எப்போ ஆப்பரேஷன்னு முடிவு பண்ணிட்டீங்களா!!?"

சற்று புன்னகைத்தவன் கட்டுபடுத்தியவாறு,"ஆ.. பண்ணியாச்சு!!இந்த வார கடைசியில பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம் !!வர ஞாயிற்றுக்கிழமை தான பிரக்கர்!!?"

பிரக்கர்,"ஆமா!சார்!"என்றபடி கையிலிருந்த பைலில் இருந்து பேப்பரை எடுத்து நீட்ட வாங்கிய ராமன் ,ஒரு தடவை கண்களால் மேலோட்டமாக பார்வையிட்டவிட்டு நாராயணனிடம் நீட்டினான்.

நாராயணன்,"இது..!!?"

ராமன்,"இது..சும்மா..!!பர்மாலிட்டி..தான்!!நான்தான் இதுவரையும் கார்டியன் அதனால!நானே பார்த்துட்டு இருந்தேன். இப்போ உங்களுக்கு எப்படி தெரியல. அதான் உங்ககிட்ட காண்பிக்கலானு கொண்டு வந்தேன்‌".

சற்று பேப்பரையே உற்று பார்த்த நாராயணன்,"முன்னாடி எப்படி பண்ணீங்களோ..அப்படி நீங்களே‌ பண்ணிடுறீங்களா!!?"என்று சற்று உதறியபடி பேப்பரை திருப்பி கொடுத்தவர் திரும்பி ஜானு நான் போயி சுவாதியை கூட்டிட்டு வரேன்!!"என்று வெளியேறினார்.

ராமன் திரும்பி பிரக்கரிடம் கொடுத்தவன்,"பிரக்கர்,நீங்க மீதி பர்மாலிட்டியை பாருங்க!!நான் வந்து
பார்த்துக்குறேன் "எனவும் பிரக்கரும் வெளியேற சுமி பாட்டியும் திவீயும் முகத்தை திரும்பியபடி நின்றிருந்தனர்.

அம்ரூவின் அருகே சென்ற ராமனை கண்டு கொள்ளாதவள் ராமன் கையை பிடிக்கவும் அதிர்ச்சியில் வெடுக்கென பிடுங்க இதனை கண்ட கிரண்" என்னாச்சு அமிர்தா!?" என்றான்

ராமன் சற்று புன்னகைத்தபடி,"நாடி பார்க்கன்னுன்னா கையை கொடுத்தா தான தெரியும் !இப்படி பண்ண எப்படி பார்க்கிறது ,நீயே சொல்லு கிரண்!!?"

ஏதும் பேசாமல் அம்ரூ முறைத்தபடி கையை நீட்ட உள்ளூர சிரித்தபடி நாடி பார்த்தவன் ,"ரொம்ப துடிச்சுருக்கும் போலவே !!" என்று கண்ணடிக்க
சற்று முன்னே வந்த கிஷோர்,"அங்க விட !இந்த பக்கம் திரும்பி பாட்டி கையும் பாரேன்!!?அங்க விட இங்க எகிறிரிக்கும்ன்னு தோணுது!!?"

வெடுக்கென திரும்பிய பாட்டி ,பேச்சு வராதபடி ,"உங்களுக்கு .. தமி.. தெரியுமா..!!"

முன்னே வந்த பிரதீக்,"எங்களுக்கு பாடவே ...தெரியுமே!!இதும் போதும் எனக்கு...!, இது போதுமே!!!...."

பாட்டிக்கு வாயிலிருந்து வார்த்தைகளே இல்லை காதை பொத்தியபடி , சிரித்து கொண்டிருந்த அம்ரூவை முறைத்தவர், திருதிருவென விழித்து கொண்டிருந்த தீவியின் கையை இழுத்தபடி ,"ஜானு,........! நாங்க கீழே போறோம்!!அவன் வந்ததும் கூட்டிட்டு வா..! வீட்டிக்கு போலாம் "என்று வேகமாக நகர இடைமறித்த கிரண் என்னாச்சு பாட்டி!? ஏன் இப்படி கிளம்பறீங்க!!?"

கூச்சத்தில் சுமி பாட்டி நிமிராமல் ,"எல்லாம்.. உங்க பிரண்ட்ஸ்யே கேளுப்பா... சொல்லுவாங்க!!?" என்று விரைந்து வெளியேறினார்.

குரு,"என்னடா பண்ணீங்க பாட்டியை!!?"

திரும்பிய கிஷோர்,"நாங்க எதுமே பண்ணலியே பா..!! வேடிக்கை மட்டும் தான் பாத்தோம்!!அம்ரூவ வேணும்ன்னா.. கேளு!!?"

பிரதீப்,"நடக்க விட்டு வேடிக்கை பார்த்ததே..!!அம்ரூ தான!!?"

அம்ரூ,"ஹாஹா..!!பாட்டி வந்துலேருந்து ஓவரா பண்ணிட்டு இருந்தாங்களா..!அதான் கொஞ்சம் விளையாடினேன்!!நீங்களும் புரிஞ்சுகிட்டு அமைதியா இருந்தீங்களே!!அது தான் பிரமாதம்!!"என்று சிரிக்க

ராமன்,"நீங்க உங்க இஷ்டத்துக்கு விளையாட்டீங்க!!இப்போ பாட்டி கோபிச்சிட்டு போறாங்களே!!?விளையாடறத்துக்கு ஒரு லிமிட் வேணாமா!!?"

அம்ரூ,"இங்க பாருங்க கிரண்!!லிமிட் பத்தி எங்களுக்கு தெரியும்!!தெரிஞ்சு தான் செய்வோம்!!அதோட பாட்டி ஒன்னும் கோபிச்சிக்களாம் மாட்டாங்க!!அப்படியே இருந்தாலும் நான் பேசிக்குறேன்!!"என்று சடலேன பதிலளிக்க ,
புரியாது விழித்திருந்த கிரண் ராமனை நோக்க,"ஆமாம்! ஆமாம்! கிரண் ,எல்லாம் தெரிஞ்சு புரிஞ்சவங்க தான்!! சிலசமயம் புரிஞ்சும் புரியாதமாறி நடிப்பாங்க!!"

அம்ரூ,"கிரண்..!இங்க யாரும் நடிக்கலை!"என்று முடிப்பதற்குள் கிஷோர்," ஒரு நிமிஷம்!!இங்க ஏதோ நடக்க போதுன்னு மட்டும் தெரியுது! அதுக்கு முன்னாடி நாங்க சொல்ல வரதை கேளுங்கறீங்களா!!?"

குரு,"ஆமாம் ல ..!வந்ததுமே கேட்க நினைச்சேன்!என்ன விஷயம் எதுக்கு வர சொன்னீங்க!!?"

அம்ரூ,"என்னைய பார்க்க வந்தேன்னு சொன்னீங்க?!"

குரு,"அதுவும் தான் அம்ரூ!!"

ராமன்,"நீ சொல்லு கிஷோர்!!"

கிஷோர்,"ராம்!!என்னைய ஏன் கேட்கற ,நம்ம புது மாப்பிள்ளையே கேளு!!"

கிரண்,"என்னடா சொல்லுற!!?" என்று ஆனந்தமாக பிரதீக்கை நோக்க

பிரதீக்,"ராம் !எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்காங்க ?!அடுத்த மாசம் கல்யாணம் ."

கிரண் கட்டியணைத்து வாழ்த்துக்கள் கூற ராமனும் சேர்ந்து கொண்டான்.

பிரதீக் திரும்பி,"அம்ரூ!!சீக்கிரம் சரியாகி வந்து, என் கல்யாண வேலை எல்லாம் நீ தான் பாக்குற!?அதான் எல்லாரையும் இங்க வரவச்சி உன் முன்னாடி சொல்லுறேன்."

அம்ரூ புன்னகைத்தபடி,"ரொம்ப சந்தோஷம் பிரதீக்!! ,உயிரோட இருந்துட்டேனா!! கண்டிப்பா நான் தான் செய்வேன் !!உங்களுக்காது என் நினைப்பு இருக்கே!!"

சட்டென்று ராமன் உச்சிக்கு ஏற, அங்கிருந்த கூஜாவை தள்ளியவன்,"
பொறுமை எல்லாம் ஒரு அளவுக்கு தான் !! எல்லாமே இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருந்தா ,நான் பொறுமையாக பார்த்ததுட்டு இருக்க மாட்டேன்! "என்று கர்ஜுத்தவன் சடலேன வெளியேற கிரண் அம்ரூவை பார்த்துவிட்டு பின்னேயே செல்ல,குரு,"ஏன் அமிர்தா!!?"

அம்ரூ,"நான் ஒன்னும் தப்பா சொல்லலை!!" என்றவளை ஏதும் கூறாமல் அனைவரும் வெளியேற ஜானு அனைத்தையும் மலைத்தபடி பார்த்து நின்றிருந்தவள் ,"இங்க என்ன நடக்குது அம்ரூ!!?நீ ஏன் அவனை பார்த்து பயப்படற!!உன்னை எதாவது சொல்லி மிரட்டினாங்களா !!??"என்று அருகே வர

அம்ரூ கைகளால் கால்களை கட்டியபடி ," ஜானு !!ப்ளீஸ் என்னைய தனியா விடுறீயா!!?"

மேலே கை வைத்தவளை ,"நிஜமாதான்.. ப்ளீஸ் கிளம்பு!!..,அப்படியே அப்பாவையும் அம்மாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு போயேன் !!உனக்கு எல்லாதையும் அப்புறமா சொல்லுறேன்!!"என்று படபடப்புடன் பேசியவளை எதும் சொல்லாமல் கிளம்பி சென்றாள் ஜானு.



Continue Reading

You'll Also Like

34.1K 2.3K 49
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
27.1K 1.5K 15
As I said earlier, enaku description ezhutha therla. yaarachu enaku description ezhutha solli kudunga makkale. It's love between Divya and karthick...
28.3K 929 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
166K 6.7K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.