இராமன் தேடிய கண்கள்

By Gayathrisivak

22.2K 1K 102

காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்க... More

தேடல்-1
தேடல்-2
தேடல்-3
தேடல்-4
தேடல்-5
தேடல்-6
தேடல்-7
தேடல் -8
தேடல்-9
தேடல்-10
தேடல்-11
தேடல்-12
தேடல் -13
தேடல்-14
தேடல்-15
தேடல்-16
தேடல்-17
தேடல்-18
தேடல்-19
தேடல் -20
தேடல் -21
தேடல் -22
தேடல் -23
தேடல் -24
தேடல்-25
தேடல் -26
தேடல் -27
தேடல் -28
தேடல் -29
தேடல் -30
தேடல் -31
தேடல்-32
தேடல் -33
தேடல்-34
தேடல்-35
தேடல் -36
தேடல்-37
தேடல்-38
தேடல்-39
தேடல்-40
தேடல் -41
தேடல் -42
தேடல் -43
தேடல் - 44
தேடல்-45
தேடல்-46
தேடல்-47
தேடல்-48
தேடல்-49
தேடல்-50
தேடல்-51
தேடல்-52
தேடல் -53
தேடல்-55
தேடல்-56
தேடல் -57
தேடல்-58
தேடல்-59
தேடல்-60
தேடல்-61
தேடல்-62
தேடல்-63
தேடல்-64
தேடல்-65
தேடல்-66
தேடல்-67
தேடல்-68

தேடல்-54

223 13 2
By Gayathrisivak


அது ஒரு பசுமையான பூஞ்சோலை.., தரையை வெறித்தபடி அமர்ந்திருவனிடம் பேசவும் முடியாமல், தனியே விட்டு செல்லவும் முடியாமல் சற்று இடைவெளியில் பின்பக்கமாக அமர்ந்திருந்தான் கிரண்.

இதமான தென்றல் தடவி செல்ல ராமனுக்கு அவனின் அம்மூவின் நினைவுகள் தடவி சென்றன.

சிலநேரம் சென்றபின் கிரணின் இருப்பை உணர்ந்த ராமன் அவனின் அருகில் சென்று அமர்ந்தான்.

ராம்,"எனக்கு நல்லா தெரியும் டா... கிரண்!! எவ்வளவுவோ யோசிச்சி பார்த்துட்டேன் டா..,நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனோன்னு யோசிச்சேன்!!,ஆனா அவ பொய் சொல்லுறா!! பல தடவ அவ கண்ணுல நான் பார்த்துருக்கேன்!!நீயே சொல்லு எவ்வளவு பேர் இருந்தோம், எல்லாருக்கிட்டையும் போய் அவ பேசிட்டு..!! சண்டை போடுட்டு இருந்தாளா!! என்னைய தேடி தேடி அவளாவே வந்தா...!! அவ்வளளோ ஏன் நீ தான அவளுக்கு கிளோஸ் ,ஆனா உன்னையை அவ கிட்ட விட்டுருக்காளா!!...,உன் மேல அவளுக்கு ஒரு அக்கறையை பார்த்துருக்கேன் ...,ஆனா என்மேல அவளுக்கு இருந்த அந்த காதலை நான் பீல் பண்ணிருக்கேன். நான் அவ மடியில படுக்கும் போதெல்லாம் அம்மா மடியில படுத்தமாறி இருக்கும் ...!! , அப்போலாம் அவளுக்கும் எனக்கும் நடுவுல இருந்த அந்த ஒரு பீல் எனக்கு பொய்ன்னு நினைக்கவே முடியலை !!,எனக்கு என்னமோ ஏதோ அவ என்கிட்ட மறைக்கிறான்னு மட்டும் நல்லா தெரியுது ரா!!.

கிரண்,"ராம் ...எனக்கு உன்னைய பார்த்தாலே தெரியுது!!,நீ அமிர்தாவ எவ்வளவு நேசிக்குறனு!! , நான் உன்னை இப்படி பார்ப்பேன்னு நினைச்சு பார்த்ததே இல்லே!! அவ்வளவு ஒரு காதல் !!,அப்படி ஒரு ஏக்கம் தெரியுது உன் கண்ணுல!!, நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை!!உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை செய்!! நான் கூடவே தான் இருப்பேன்!!"

இதனை கேட்ட ராமன் மகிழ்ச்சி வெள்ளத்தில் கிரணை இழுத்து அணைத்து கொண்டான்.

கிரண்,"சரி... சரி !! அடுத்து என்ன பண்ணலானு யோசி !!" என்று ஆனந்த கடலில் திளைத்து போனான் கிரண்.

ராமன்,"சரி வா!! ,தாத்தாட்ட போயி பேசுவோம்!!"

வாசலிலேயே காத்திருந்த மஞ்சு பாட்டி இவர்களை கண்டதும் இறங்கி வந்தார்.

மஞ்சு பாட்டி,"ராமு...!! கிரண்...!! என்னப்பா ஆச்சு !!நீங்க மட்டும் வரீங்க ... அமிர்தா எங்க ??!"

ராம்,"சொல்லுறேன் பாட்டி !!உள்ளே போலாம் வாங்க!!"

நேரே தாத்தாவை தேடி சென்றனர்.

வேணு தாத்தா,"அட..அடட ராம் !!அமிர்தா வந்துட்டாளா!!"

சற்று தயங்கிய ராமன் நடந்ததை சொல்லி முடிக்க அதிர்ந்து போனார் பாட்டி.

மஞ்சு பாட்டி,"என்னப்பா!! சொல்லுற !! காலையில உங்க தாத்தா சொன்னதை வச்சி ... அவ்வளவோ சந்தோஷ பட்டேன், நீ என்ன ஒரு குண்டை தூக்கி போடுற!!? "

கிரண்,"எங்களுக்கே ஒன்னும் புரியலை பாட்டி!! "

மஞ்சு,"என்னப்பா இது...!! நான் ஒருமாறி எல்லாரையும் சமாளிச்சு கல்யாணத்துக்கு கூடம் பேசி வச்சிருக்கேன் !! இப்படி வந்து சொன்னா !!? நான் என்ன பண்ணுவேன் !!அந்த கடவுள் ஏன் தா..., என்னைய இப்படி சோதிக்கறானோ!!!"

அமைதியாக கேட்ட வேணு தாத்தா,"நீ என்ன நினைக்குற ராம்!!?"

ராம்,"எனக்கு கல்யாணம்ன்னு நடந்தா!!...அமிர்தா வோட தான்... தாத்தா!" என்றவனின் கண்ணில் நம்பிக்கை தென்பட்டது.

மஞ்சு பாட்டி,"என்ன ராம்!! குழப்புற ... ??!! ,அமிர்தா இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா எனக்கும் சந்தோஷம் தான்!!,ஆனா அவ தான் உன்னை பிடிக்கலைனு சொல்லுறாளே!!??".

பாட்டியிடம் சென்றவன் அவர் கன்னங்களை கிள்ளியாவாறு,"அது பத்தி நீங்க கவலை படாதீங்க பாட்டி!!" திரும்பியவன்,"தாத்தா !! அவ ஏதோ மறைக்குறா என்கிட்ட..!!" என்றான்.

வேணு,"அப்புறம் என்ன ஆக வேண்டியத பாரு!! இப்போ அவ எங்க இருக்காளாம்!!?"

கிரண்,"நம்ம ஷானு வீட்டில இருக்குறதா!!... குருகிட்ட சொன்னாங்க .... தாத்தா!!"

வேணு,"நம்ம ஷானு சொல்லாம இருக்கமாட்டாளே...?? !! ஏதோ இருக்கு....!!,போன் போட்டு... நான் வர சொன்னேனு சொல்லு!!"

அந்தி பொழுது ஷானு உள்ளே நுழைய பத்து மாமா வரவேற்றார்.
உள்ளிருந்து வந்த பானுவும் மஞ்சு பாட்டியும் நலம் விசாரிக்க தாத்தா நாற்காலியை உருட்டியபடி வெளியே வந்தார்.

வேணு,"வா மா... ஷானு!!என்ன ஒரே பிஸிபோல இந்த தாத்தாவை மறந்தே போயிட்டல!! ??"

ஷானு,"என்ன தாத்தா!! இப்படி சொல்லுறீங்க ...,உங்களை போயி மறக்க முடியுமா..!!? ....சொல்லுங்க என்ன விஷயம்..! ,என்னைய வர சொன்னீங்கன்னு ...,கிரண் கால் பண்ணானே!!?"

வேணு,"தீபி மா...,மேல போயி அண்ணனுங்கள வர சொல்லு !! நான் கூப்பிட்டேனு சொல்லு மா!!?"

இறங்கி வருகையில் ராமனின் கண்களில் தென்பட்ட அந்த மின்னலை உணர்ந்தாள் ஷானு.

வேணு ,"வாங்கப்பா!! யாரு வந்துருக்கா பாருங்க!! " இருவரை பார்த்து புன்னகை செய்த ஷானு சற்று குழம்பி போனாள்.

வேணு தாத்தா மஞ்சு பாட்டியிடம் திரும்பி,"அம்மா... மஞ்சு !!நான்... பசங்க.... ஷானுலாம் பக்கதுல இருக்க இஸ்கான் கோயிலுக்கு போயிட்டு வந்துடுறோமா !!"என்றதும் பாட்டி மெல்ல தலையை ஆட்ட ஷானுக்கு ஒன்றும் புரியாமல் திகைத்து போனாள்.

தரிசனம் முடித்து வெளியே வந்து சுற்று பகுதியில் அமர்ந்தார்கள். மெல்ல தாத்தா பேச்சு குடுக்க ஆரம்பித்தார்.

வேணு," ஆமா..ஷானுமா!!நம்ம வீட்டில இருந்தால அந்த அமிர்தா பொண்ணு !! அவ இப்போ உன் வீட்டில இருக்குறதா கிரண் சொன்னான் மா... எப்படி இருக்கா அவ !!?நல்லா இருக்காளா!!போனதுலேருந்து ஒரு தகவலும் இல்லே!!".

அதிர்ந்த ஷானு சற்று தயக்கத்துடன்,"உங்களுக்கு எப்படி தெரியும்!!? என்றாள் கிரணை நோக்கி

வேணு,"தெரிஞ்சா என்ன!!? ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுற !?" என்றார்.

சற்று தயங்கிய ஷானு ,"இல்ல தாத்தா !!என் கிட்ட உங்க யாருக்கும் சொல்ல வேணான்னு சொன்னாங்களே!!? அதான்".

கிரண்,"ஏன் !!? சொல்ல கூடாது!!, அவங்க சொன்னா நீ எதும் சொல்ல மாட்டியா...!அவ்வளவு தான நம்ம!!!, எப்படி தேடிட்டு இருக்கோம் தெரியுமா அவங்களை நாங்க !?!!".

புரியாமல் விழித்தவள் ," என்ன கிரண் பேசுற!!? அவங்க சூழ்நிலை அப்படி! ,அவங்க சொன்ன காரணம் சரியா இருந்தது அதான் உங்கிட்ட சொல்லலை...!!, அதோட நீங்க அம்ரூவ ஏன் தேடறீங்க!!? நீங்க தேடுறீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்!!?".

வேணு,"சரிதான் ம்மா..... அவ கிடக்குறான் நீ சொல்லுமா!!என்னாச்சு!!? என்ன பிரச்சினை!!?"

ஷானு," என்ன தாத்தா !! நடக்குது அம்ரூ பத்தி கேட்கவா வர சொன்னீங்க!!??"

வேணு,"தாத்தா.. கேட்கறேன்ல நீ மறைக்காம என்ன நடந்தது ன்னு முதலேருந்து சொல்லு!! அப்புறம் விளக்கமா... தாத்தா சொல்லுறேன்!!"

ஷானு ,"அது வந்து தாத்தா...!!"

கிரண் ஆர்வமாய்,"ப்ளீஸ் ஷானு சொல்லு!!!எங்க பார்த்த அவங்கள?!!"

ஷானு மெல்ல ஆரம்பித்தாள்..,"ராம் கல்யாணம் நின்னு ஒருமாச கழிச்சி இருக்கும் ,இரண்டு மூனு தடவை என் ஹாஸ்பிடல..... வெளியன்னு... பார்த்தேன்!!ஆனா பேச முடியலை... ,அப்புறம் ஒருவாட்டி எதிர் எதிர்ல பார்த்துட்டோம் ,அப்போதான் உட்கார்ந்து பேசினோம்!!.அவங்க எல்லாரையும் விசாரிச்சாங்க!!அப்புறம் ராம் கல்யாணத்தை பத்தி கேட்டாங்க!!? ,அப்போதான் அவங்களுக்கு விஷயமே தெரியாதுன்னு எனக்கு தெரிஞ்சு நடந்ததை சொன்னேன்!!ஆனா அவங்க ரியாக்ஷன்ல எனக்கு வித்தியாசமா தெரிஞ்சுது,அவங்க கல்யாணம் நின்னு போச்சின்னு கஷ்டபடுவாங்கனு பார்த்தா... !! அவங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் ... !!நிஜமா !!!நிஜமாவான்னு நிறைய தடவ கேட்டாங்க? !!"

இதனை கேட்ட ராமன் எழந்து வந்து ஷானு அருகில் நிற்க கிரண்,"சரி... அதுக்கு நீ என்ன சொன்ன!?"

ஷானு,"நான் என்ன சொல்லறது ... !! எனக்கு சந்தேகம் வந்து நானும் கேட்டேன்...!! இது சரியில்லையே அமிர்தா!! என்ன விஷயமுன்னு!!, முதல்ல ஒன்னுமில்லைனு சமாளிச்சாங்க ...!! நான் யாரு விடுவேனா!! சொல்ல வச்சிட்டேன்ல !?"

கிரண்,"என்னது!"

ஷானு,"அதெல்லாம் பர்ஸனல் மா!!? சொல்ல கூடாது?!!" என்று கண்ணடிக்க...

கிரண்,"இவ வேற ஒருத்தி ...!! பெரிய இவ மாதிரி சீன் போடுறா!!என்ன சொன்னாங்கன்னு ஒழுங்கா.., சொல்லு!!"

ராமன் ,"ஷானு..!!ப்ளிஸ் என்ன தான் சொன்னா சொல்லேன்!!?"

ஷானு,"நீ கேட்கறத பார்த்தா... ஏதோ இருக்கு போலவே....!! சரி அப்போ... அம்ரூக்கு உன்மேல ஒரு கண்ணு ராம்!!அவங்க உன்னை எவ்வளவு உருகி உருகி காதலிச்சாங்க, அப்புறம் நீ அவங்கள எவ்வளவு அழ வச்சனு சொன்னாங்க!!! , சொல்லிட்டு உங்க யாருகிட்டையும் சொல்ல வேணான்னும், அவங்க மனசுல இருந்தை யாருக்கிட்டையாது சொல்லனு தோணுச்சாம் அதான் சொல்லிட்டேனு சொன்னாங்க!!என்பதற்குள் கிரணும்
ராமும் கையை தூக்கி அடித்து கொண்டும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கொண்டனர்.

ராம்,"நான் சொன்னே இல்லைடா!! அவ பொய் சொல்லுறான்னு!! எனக்கு தெரியாதா ....என் அம்மூவ பத்தி... !!கேடி !!! எல்லாம் தெரிஞ்சுகிட்டு சுப்பண்ணாவ வேற விசாரிச்சிருக்கா!!இதுல நான் சொன்னேனான்னு கேள்வி வேற...!!"

இருவரின் உரையாடலை பார்த்த ஷானு,"இருங்க...!! இருங்க..!!ராம் உனக்கு அம்ரூவ முதல்லியே பிடிக்குமா!?"

கிரண்,"பிடிக்குமாவா!!?நீ வேற...,அந்த கண்ணை பார்க்காமா இருக்க முடியலையாம்!! சாரு.....டெல்லி முழுசா தெரு தெருவா எப்படி தேடினாரு !! ராம் கவிதைலாம் சொல்லி பார்த்துருக்கியா!!!இப்போ சொல்லுறான். அம்ரூன்னு வரவேமாட்டுது அவன் வாயில..!,அவ்வளவு அன்பு அவன் அம்மூ மேல...!!, மடியில தாலாட்டெலாம் பாடி...,ஓரே காதல் மழையை புழுஞ்சி தள்ளிருக்கான்..., நாம தான் ஒன்னும் தெரியமா... இருந்திருக்கோம்...!!.

தன்னை கிண்டல் செய்தவனை விளையாட்டாக அடிக்க ராமும் கிரண் ஒடி அடித்து விளையாடுவதை மெய் மறந்து பார்த்திருந்தார் வேணு தாத்தா.

அந்த சிரிப்பலையின் நடுவே ஷானுவே தொடர்ந்தாள்,"எனக்கு தெரியாது பா!!அவங்க சொன்னா காரணம் அப்படி... !!அதான் வந்து சொல்லைல... ,அதோட உனக்கு அப்போதான கல்யாணம் நின்னுச்சி!!ஏன் தேவையில்லாம உன்னை இன்னும் டென்ஷன் பண்ணணும். அதோட அவங்கள உனக்கு பிடிக்கும் ன்னு எனக்கு தெரியாதே!! தெரிஞ்சா சொல்லாம இருப்பனா... சொல்லு!!"என்று ஒருவித குற்ற உணர்வோடு பேசியவளின் அருகே வந்தவன் அவளின் கைகளை பிடித்தபடி," நடந்ததை விடு!! இப்போ நீ எவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்கன்னு உனக்கு தெரியாது !!என்று மறுகி நின்றவனிடம் நினைவு வந்தவளாய்,
"முக்கியமான ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் ராம் !!அவங்க சொன்ன காரணம் ன்னு சொன்னேன்ல ... ,அது வந்து....!!!
---- அவங்க டெல்லி வந்ததே ........! ஒரு ஆப்ரேஷனுக்காக தான்!!"

கிரண் திடுக்கிட்டவனாய், "என்னது...!!!!???""

Continue Reading

You'll Also Like

107K 3K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
180K 14.9K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...
24K 617 46
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்