💟 ஜீவாமிர்தம் 42

Start from the beginning
                                    

"குட்மார்னிங் அபிநயசரஸ்வதி மேடம்; நைட் ஆட்டம் பாட்டுன்னு ஒரே ஜாலியா இருந்தீங்க போலிருக்கு. ஏன் அதுக்குள்ள கிளம்பி இங்க வந்துட்டீங்க.....விடியறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கே; உங்க க்ளாஸஸ்க்கு ப்ரிப்பரேஷன் போய்ட்டு இருக்கா?" என்று கேட்ட படி அவள் புக்கை பார்த்து விட்டு இரண்டடி தூரத்தில் நின்று பேசிக் கொண்டு இருந்தான் பார்கவ்.

"கு....குட்மார்னிங் கவி ஸாரி; உங்கள காக்க வைச்சது தப்பு தான், ஆனா கவிப்ரியா, ஷைலு கூட சேர்ந்து இருந்தது எவ்வளவு நல்லா இருந்தது தெரியுமா....நான் இந்த மாதிரி சுபா, மோகனா கூட எல்லாம் விளையாண்டதே இல்ல; சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு. அவ்வளவு ஜாலியா இருந்ததுப்பா!" என்று சொல்லி அவன் அருகே சென்று அவனை அணைத்துக் கொள்ள சென்றவளை "அங்கயே நில்லு கட்டிப் பிடிக்க வந்த கொன்னுடுவேன்!" என்று சொல்லி எட்டி நிற்குமாறு பணித்தான்  பார்கவ்.

"ம்ப்ச்....என்ன கவி!" என்று சலித்துக் கொண்டவளிடம்,

"நீயும் அந்த குரங்குகளும் குதிச்சு விளையாட என் கல்யாண நாள் ராத்திரி தான் கிடைச்சதா உங்களுக்கு?  பாவிகளா மொத்தமா மண்ணை அள்ளிப் போட்டீங்களேடீ, நீ பெரிசா தலைய ஆட்டும் போதே எனக்கு தெரியும், ஏதோ வில்லங்கம் வரப்போகுதுன்னு...... மரியாதையா நான் லாஸ் பண்ணின ப்ரீசியஸ் மொமண்ட்ஸை காம்பன்சேட் பண்ணு. இல்லன்னா கிட்ட வராத, அப்படியே ஓடிடு!" என்று சொன்னவனிடம்,

"இப்போ எப்படி போன டைமை காம்பன்சேட் பண்ண முடியும் கவி?" என்று உச்சுக் கொட்டினாள் அபிநயா.

"ஒண்ணும் பிரச்சனை இல்ல. இப்போ மணி நாலு தானே ஆகுது.....காலேஜ் 9 மணிக்கு தானே போகணும்? இன்னும் 5 மணி நேரம் இருக்கே.....அதுக்குள்ள இன்னும் என்னன்னமோ பண்ணலாம்! 8 வருஷ டெப்த்தை காட்ட முடியுமான்னு தெரியல. ஆனா பாட்டுப் பாடிடலாம்!" என்று சொல்லி அவள் கைப்பற்றி தன் மார்பில் அவளை தாங்கிக் கொண்டவனிடம் சிறு சிரிப்புடன்,

"ப்ளீஸ் கவி...... நாலரை மணி நேரம் நீங்க எடுத்துக்கோங்க, எனக்கு காலேஜ்க்கு ரெடியாக ஒரு அரைமணி நேரம் வேணும், ஆமா உங்கள டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தானே சத்தம் கூட போடாம மெதுவா உள்ள வந்தேன், நீங்க நைட் பூராவும் தூங்கவே இல்லையா?" என்று கேட்ட அபிநயாவின் கன்னத்தில் முத்தமிட்டு,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now