💟 ஜீவாமிர்தம் 51

2.2K 126 29
                                    

"என்ன ஷைலும்மா கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு இவ்வளவு நேரமா உன்னை ஆளக் காணும்..... இப்போ தான் பவினை கூப்பிடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன். கரெக்டா நீங்களும் வந்துட்டீங்க! ரெண்டு பேரும் ஏதாவது சாப்பிட்டீங்களா?" என்று கேட்ட ஜீவாவிடம்,

"நிறைய சாப்பிட்டாச்சுண்ணா, நீ எல்லார் கூடயும் கோவிலுக்கு போகலையா? தனியா வீட்ல உட்கார்ந்துட்டு என்ன பண்ற?" என்று ஷைலு தன் அண்ணனிடம் பேசிக் கொண்டிருக்கையில் பூஜையறையில் இருந்து கவிப்ரியா வெளியே வந்தாள்.

"ஓ! நீயும் இங்க தான் இருக்கியா கவிஅக்கா?" என்று கேட்டு குறும்பாக சிரித்தவளிடம் ஜீவானந்தன் புன்னகையுடன்,

"உங்க அண்ணி தலை வலிக்குதுன்னு சொன்னாடா, அதுனால தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன், இனிமே கவியை அண்ணின்னு கூப்பிட பழகு ஷைலும்மா, அப்படி கூப்பிட வரலைன்னா கவின்னே கூப்பிடு, அக்கான்னு கூப்பிட்டு முறையை மாத்தாத!" என்று சொன்ன தன் அண்ணனிடம் ஒரு ஆராய்ச்சி பார்வையுடன் அவனை ஏற இறங்க பார்த்த ஷைலு,

"இத்தன வருஷமா நான் இவள கவி அக்கான்னு தானே கூப்பிட்டுட்டு இருக்கேன், அப்போ எல்லாம் நீ ஒண்ணும் சொல்லல, இப்போ மட்டும் எதுக்கு அண்ணின்னு கூப்பிட சொல்றடா?" என்று கேட்டாள்.

பவின் அவளருகில் வந்து, "நம்ம மேரேஜ்க்கு அப்புறம் கொஞ்ச நாள்ல உங்க அண்ணாவுக்கும் கவிப்ரியாவுக்கும் மேரேஜ் ஆகப் போகுதுல்ல ஷைலு; அதனால இப்போ இருந்து அண்ணின்னு கூப்பிட்டு ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சுடு! ஜீவா கரெக்டா தான் சொல்றாரு!" என்று சொல்லவும் ஷைலு அவன் பேச்சை மறுக்க முடியாமல் தலையாட்டி வைத்தாள்.

சற்று நேரத்தில் மணமக்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வர குடும்பத்தினர் அனைவரும் அவர்களின் பின்னால் வந்தனர். திருமணத்திற்கு வந்த தன் பக்கத்து சொந்தங்கள் அனைவரையும் இசக்கிராசு திருமணம் முடிந்த பின் மண்டபத்தில் இருந்து அவர்கள் வந்த வாகனத்திலேயே அம்பைக்கு கிளப்பி விட்டு விட்டான். "என்னத்தான் எங்கள கட்டிக்கிடுவன்னு நினைச்சா பொசுக்குன்னு மாமன் மவள கட்டிக்கிடுதியோ..... ஏன் நாங்கல்லாம் ஒங்கண்ணுக்கு ஆளா தெரியலயாக்கும்?" என்று கேட்டு முறைப்பெண் சீதனத்தை கொடுத்தால் மட்டுமே அவனை இனியாவுடன் போக விடுவோம் என்று சொல்லி அடம்பிடித்து கொண்டு இருந்த நான்கைந்து முறைப்பெண்களை பார்த்த ராசுவின் பாட்டி,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now