💟 ஜீவாமிர்தம் 66

2.1K 124 22
                                    

பவின் ஷைலு மற்றும் ஜீவானந்தன் கவிப்ரியா ஆகியோரின்
திருமண வரவேற்பில் நிறைய எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்திருந்தது. கௌதமன், அர்ஜுன் இருவரையும் கட்டிப் பிடித்துக் கொண்டே அலைந்த ஜெய் நந்தனை நிர்மலா தனியாக அழைத்து சென்று ஓர் ஓரத்தில் அமர்த்தி விட்டு,

"ஸ்ரீ என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏன் அர்ஜுன் அண்ணா, கௌதம் அண்ணாவையும் சும்மா இருக்க விடாம இப்படி இம்சை பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்ட தன் மனைவியிடம் உச்சுக் கொட்டி,

"நீ உங்க மாமா வீட்ல முதமுதல்ல என் கூட நம்ம வீட்டுக்கு வர்றப்போ சத்தம் வராம அழுத.... உனக்கு நியாபகம் இருக்கா பஞ்சு மூட்டை?" என்று கேட்டவரை விசித்திரமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,

"தெரிஞ்ச சொந்தக்காரங்களை விட்டுட்டு தெரியாத இடத்துக்கு வேலைக்கு போகப்போறோமேன்னு கொஞ்சம் ஃபீல் பண்ணியிருப்பேனா இருக்கும், நீங்க எதுக்கு இப்படி குறுக்கும் நெடுக்குமா நடந்துட்டு இருக்கீங்கன்னு கேட்டா நான் எப்பவோ அழுதத இப்போ எதுக்கு பேசிட்டு இருக்கீங்க மிஸ்டர் நந்தன்?" என்று சிரிப்புடன் கேட்டவரை தீப்பார்வை பார்த்த ஜெய் நந்தன்,

"சிரிக்காதடீ..... உன் மாமா வீட்ல உன்னை ஏன்டா இங்க வச்சுருக்கோம்னு உங்க அத்தை உன் காதுபடவே பேசியிருக்காங்கன்னு நீ எங்கிட்ட சொல்லியிருக்க. ஆனாலும் அங்கிருந்து கிளம்பி வரும் போது உங்க மாமாவையோ இல்ல உன் பிரெண்டு நதியவோ இல்ல வேற எதையோ மிஸ் பண்ணிட்ட ஒரு உணர்வு வந்ததால தானே அன்னிக்கு நீ அழுத..... அவங்க கடனேன்னு வளர்த்த உனக்கே இவ்வளவு கஷ்டமா இருந்ததுன்னா, நாம எல்லாரும் இவ்வளவு நாள் நம்ம லட்டுவையும், ரூபினியையும் எவ்வளவு பார்த்து பார்த்து வளர்த்துருக்கோம், இப்போ புருஷன் வீட்டுக்கு கிளம்புறப்போ அதுங்க ரெண்டும் கண்கலங்குனா எனக்கு..... என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியும்னு தோணல நிலாம்மா!" என்று சொல்லி தழுதழுத்தவரிடம் ஆறுதலை செய்கையில் காட்ட எண்ணி அவர் கைகளைப் பற்றிக் கொண்டார் நிர்மலா.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now