💟 ஜீவாமிர்தம் 25

2.6K 138 21
                                    

"அவள்" பேஷன் க்ரியேட்டர்ஸின் முன் காரை நிறுத்திய ஜீவா தன் வேகமான எட்டுகளுடன் உள்ளே நுழைந்தான்.

"ஹலோ ஸார்.....நில்லுங்க! வெயிட் பண்ணுங்க. இன்னும் ஷாப் ஓப்பன் பண்ணல. கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க. எப்படியும் இன்னும் ஒன் ஹவர் ஆகும்!" என்று சொன்னார் ஒரு துவாரபாலகி.

"ஏன் உங்க ஓனர் மேடம் இன்னும் கவுந்தடிச்சு படுத்து தூங்கிட்டு இருக்காங்களா? நீங்க தான் அவங்களுக்கு காவல் தெய்வமாக்கும்..... பரவாயில்லை; நல்ல ஆளா தான் செலக்ட் பண்ணி இருக்காங்க. உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டவனை சுட்டுப் பொசுக்குவது போல் முறைத்த அவள்,

"மிஸ்டர் கடை இன்னும் ஓப்பன் பண்ணல. கிளம்புங்கன்னு சொல்றேன்! புரியலையா?" என்றாள் எரிச்சலை அடக்கிக் கொண்டு.

"மேடம்..... உங்க ஷாப்புக்கு பர்சேஸ் பண்றதுக்காக நான் வரல. உங்க கவிப்ரியா மேடம்க்கு சாப்பாடு குடுக்கறதுக்காக வந்துருக்கேன். அவங்க ப்ரேக் பாஸ்ட் இதோ என் கையில இருக்கிற பேக்ல இருக்கு பாருங்க. இப்போ உள்ள விடுவீங்களா.....விட மாட்டீங்களா?" என்று கேட்டவனிடம் சற்று தயக்கம் காட்டி என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள் அவள்.

குறுஞ்சிரிப்புடன், "இந்த தடியனை இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே..... சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்னு சொல்றான்! இது உண்மையா, பொய்யா இருக்குமான்னு யோசிக்குறீங்க, கரெக்டா?" என்று கேட்டான் ஜீவா.

"அப்படி இல்ல ஸார்! கவி மேடம் பேமிலியில அவங்க அப்பா, அம்மா, அண்ணா எல்லாரையும் எனக்கு தெரியும். ஆனா நீங்க யாருன்னு தெரியல. அதான்......." என்று இழுத்தவளிடம் புன்னகையுடன்,

"கவி என் மாமா பொண்ணு.... தெரியாத பையன் கிட்ட இவ்வளவு கேள்வியெல்லாம் கண்டிப்பா கேட்கத் தான் செய்யணும் சிஸ்டர். ஷாப்புல நைட் எல்லாம் தனியா இருந்தான்னு சொன்னதும் எனக்கு என் மாமா, அத்தை மேல கொஞ்சம்
கோபம் கூட வந்துச்சு. பட் உங்களை பார்த்தவுடனே ரிலாக்ஸ்டா இருக்கு.
நான் வேணும்னா இங்கேயே வெயிட் பண்றேன். ஜீவா வந்திருக்கார்னு சொல்லி அவளை கூட்டிட்டு வர்றீங்களா?" என்று கேட்டவனிடம் சிரிப்புடன் தலையாட்டி விட்டு,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now