💟 ஜீவாமிர்தம் 21

2.6K 144 72
                                    

அன்றிரவு ஒன்றரை மணி இருக்கும். அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த வேளையில் ஒருவனுக்கு மட்டும் உறக்கம் வராமல் அவன் தன் மனைவியை அழைக்க கால் டைவர்ட் ஆகி குளிருக்கு இதமாக மனைவியை அணைத்துக் கொண்டு படுத்திருந்த ஜெய் நந்தனை அது தொந்தரவு படுத்தியது.

தூக்கக் கலக்கத்தில் கண்களை திறந்தவர், "நிலாம்மா மொபைல் ரிங் ஆகுது. அத எடேன்!" என்று மனைவியை எழுப்பி அவரிடம் இரண்டு திட்டுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டு அதே ஆத்திரத்தில்,

"எவன்டா நடுராத்தில இம்சை பண்றது? நீ எவனா இருந்தாலும், சொல்லப் போற விஷயம் எதுவா இருந்தாலும் காலையில பேசு. இப்போ போனை வை!" என்று சொன்னவரிடம்,

"என்ன மாமா நீங்கதானா..... இப்படி கோட்டிக்கார வேலையெல்லாம் நீங்கதேன் பாப்பீகன்னு தெரியும். உனக்கு நான் என்னய்யா பாவம் செஞ்சேன்?...... எம் பொஞ்ஜாதிய உன் கையோட கூட்டிப் போனது காணாதுன்னு இப்ப பேசக் கூட உட மாட்டியா நீ? கால் டைவர்ட் போட்டு வச்சுட்டா இந்த மஞ்ச மாக்கான் அப்படியே ஓடுறிவேன்னு நினைச்சீகளோ... இனியா புள்ள கிட்ட என்னன்ன பேச
நினைச்சேனோ அது அம்புட்டையும் உம்ம கிட்ட பேசிட்டு தேன் கடைய சாத்துவேனாக்கும்...... மொதல்ல இந்த ஐடியா யாரோடது; அந்த சுண்டக்கா தேன் மாமனோட பேச மாட்டேன் பெரியப்புன்னு உங்ககிட்ட வந்து அழுதாகளாக்கும்?" என்று கேட்ட ராசுவிடம்,

"மாப்பிள்ளை நீங்க நிதானத்துல இல்ல போலிருக்கு! யார் இந்த வேலையை பார்த்து வச்சதுன்னு நிஜமா எனக்கு தெரியல. இப்ப போய் படுங்க. காலையில இனியாட்ட பேசிட்டு நான் அவளை உங்க கிட்ட பேசச் சொல்றேன்!" என்றார் ஜெய் நந்தன் பணிவாக.

"இங்க பாருவே கூத்த..... மொக்கை நிதானத்துல இல்லன்னு நீங்க கண்டீகளா.... உங்க பொண்ணுக்கு பிடிக்காதுன்னு சொன்னாகனுட்டு நா இனிமே புகையையும், தண்ணியையும் விட்ருறம்னு எங்கொலசாமி மேல சத்தியம் பண்ணியிருக்கேன். தெரியும்ல; இனியா புள்ள இது ஒண்ணை தேன் வாயைத் திறந்து எங்கிட்ட கேட்டுச்சு. பொஞ்ஜாதி ஆசைய நிறைவேத்தாங்காட்டி எதுக்கு புருஷன்னு நா இருக்கேன்னு வேண்டாம்.... எப்ப கல்யாண வேலையெல்லாம் ஆரம்பிக்க போறீக? சத்திரம் பிடிக்கணும். சனங்கள திரட்டணும். எம்புட்டு வேல கிடக்கு? ஒவ்வொன்னா பாக்க ஆரம்பிச்சாதேன் சூளுவா இருக்கும் மாமோய்..... ஆனா எனக்கு உங்க மேல ரொம்ப கோபம் தெரியுமா..... ஒரு வாரம் கழிச்சாவது எம் பொஞ்ஜாதிய கொண்டு வந்து உடணும்னு சொல்லியிருக்கலாமுல்ல... நம்ம கட கல்லாவுல அவுகள உட்கார வைக்கல. புல்லட்டில ஏத்தி வெளிய தெருவுல நாலு இடத்துக்கு கூட்டிட்டு போகல. ஒரு முழம் பூ கூட வாங்கித் தரல. இன்னும் ஒருக்கா கூட மாமான்னு கூப்பிட வைக்க முடியல. எம் பொழப்பு இப்படி போயிகிட்டு இருந்தா என்ன செய்ய; ராத்திரி ஆனா தூக்கம் வர மாட்டேங்குது மாமா; எங்கூட்டு கிழவி வேற நீ தேன் தப்பு செஞ்சேன்னு சும்மா என்னைய ஏசிகிட்டே இருக்கு. யோவ் நான் ஒருத்தன் இங்க தொண்டத்தண்ணி வத்த கத்திகிட்டு கிடக்கேன். என்னய்யா நீரு பாட்டுக்கு அங்கண கொட்டாவி விட்டுக்கிட்டு கிடக்கீரு; என்னைய பார்த்தா உங்க எல்லாருக்கும் எளக்குநாட்டமா தெரியுதா?" என்று கொதித்தவனிடம்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now