💟 ஜீவாமிர்தம் 42

2.3K 137 55
                                    

அதிகாலை நான்கு மணியளவில்  படுக்கையறைக்குள் தன் கொலுசுகள் சத்தமிடாமல் மெதுவாக நுழைந்து முகம் கழுவி தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்து மல்ட்டிப்பிள் இண்டகெரலுடன் மண்டையை உடைத்துக் கொண்டு இருந்தாள் அபிநயசரஸ்வதி. நேற்றிரவு ம்ஹூம் இன்று அதிகாலை இரண்டு மணிக்கு தான் வேறு அறையில் கவிப்ரியா மற்றும் ஷைலஜாவுடன் சற்று கண்ணயர்ந்து விட்டு இரண்டு மணி நேரத்திற்குள் அவசரமாக எழுந்தும் விட்டாள். போன வாரம் முழுவதும் ஹாஸ்பிட்டல், கல்யாண ஷாப்பிங், என்று வேலைகளில் நேரம் ஓடி விட்டது. க்ளாஸ் எடுக்க பாடத்திட்டத்தை தூக்கி ரிவைஸ் செய்து குறிப்பு எடுக்கும் வேலையை செய்யவேயில்லை. இன்று கண்டிப்பாக வேலைக்கு சென்று விட வேண்டும். பின்புறம் திரும்பி அவனைப் பார்ப்பதற்கு அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. இரவு உணவிற்கு பின் பெரியவர்கள் பார்கவ் அபிநயாவை ஆசிர்வதித்து விட்டு செல்ல அவர்களின் அறைக்குள் நுழைந்த அபிநயாவை பார்கவ் அறைக்கு வருவதற்குள் ஷைலுவும் கவியும் சேர்ந்து கடத்திக் கொண்டு சென்று விட்டனர்.

முதலில் ஆட்டம், பாடல் என்று சென்று கொண்டிருந்த கச்சேரி பின் மோனோ ஆக்டிங், வெரைட்டி ஆக்டிங், டம்ப் சீக் என்று களைகட்டியது.

"அண்ணி ரூபி கொஞ்சம் சவுண்டை மட்டும் கம்மி பண்ணிக்குவோம். இல்லன்னா பெரியவங்க யாராவது வந்துடப் போறாங்க!" என்று கவி சொல்லிக் கொண்டு இருந்த வேளையில் அறைக்கதவு தட்டப்பட்டது.

"என்ன பண்ணிட்டு இருக்கீங்க?  தூங்குங்க எருமைகளா! நீ வா அபி நம்ம ரூமுக்கு போவோம்.....!" என்று அழைத்தவனிடம் தயக்கத்துடன் மெலிதான புன்னகை சிந்தி,

"ரொம்ப ஜாலியா இருக்குங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடட்டுமா?" என்று கேட்ட தன் மனைவியின் மேல் அனல் பார்வை வீசி விட்டு சென்றான் பார்கவ்.

"அம்மாடியோவ் அண்ணாத்தை பார்வையாலயே சுட்டுருவார் போலிருக்கே..... யாரும் பார்த்துடாம சீக்கிரம் உள்ள வாங்க அண்ணி!" என்று கூறி விட்டு அபியை மறுபடியும் அறைக்குள் இழுத்து கொண்டாள் கவிப்ரியா.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now