💟 ஜீவாமிர்தம் 6

3.8K 140 47
                                    

ஹாலில் ஜீவாவின் அருகில் வந்தமர்ந்த கவிப்ரியாவிடம், "ப்ளீஸ் கேப்ஸி, ஐ'ம் நாட் இன் அ மூட் டூ ஆர்க்யூ வித் யூ! எங்கே உன்னை ஹர்ட் பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு. அவர் கூட பேச சொல்லி என்னை கம்பெல் பண்ணாம இருந்தீங்கன்னா தான் இங்க இருப்பேன்! இல்லன்னா ப்ளாட்டுக்கு கிளம்பறேன்!" என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டிருந்த கவிப்ரியா
இனியா மற்றும் ஷைலுவை அழைத்து

"இந்த கிறுக்கன் மாமா கிட்ட என்ன உளறிட்டு வந்தானோ..... தெரியல! நீங்க ரெண்டு பேரும் அவர்ட்ட பேசிட்டு இருங்க!" என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தவள் ஜீவாவிடம் திரும்பி,

"உன் கூட கொஞ்சம் பேசணும். நீ கார்டனுக்கு வா!" என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.

அர்ஜுன், மீராவும், நிர்மலாவும் அவர்கள் இருவரையும் கவலையுடன் பார்த்து கொண்டு இருக்கவும், "ஹலோ இங்க என்ன பார்த்துட்டு நிக்கிறீங்க? காலையில தான் கடனேன்னு சமைச்சு போட்டுட்டு ஓபி அடிச்சுட்டீங்க! இப்பவாச்சும் செமையா ஒரு பிடி பிடிக்குற மாதிரி சமைச்சு வைக்கணும்! எனக்கு, ஷைலு, இனியாவுக்கு எல்லாம் நிறைய வேலை இருக்கு! ஸோ ஹெல்ப் வேணும்னு எங்கள டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. சித்தப்பு நீங்க சமையல் சூப்பர்விஷன் முடிச்சுட்டு அப்படியே ஸ்வீட் பீடாவும் ரெடி பண்ணிடுங்க. நானும், ஜீவாவும் கார்டன்ல கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கோம்!" என்று சொல்லி விட்டு ஜீவாவை கையைப் பிடித்து அழைத்து சென்றாள் கவிப்ரியா.

"அம்முலு....கையை விடு! நானே வர்றேன்.....!" என்று சொன்னவனிடம்,

"விடுவேன். ஆனா ஓடிட மாட்டியே.....?" என்று ஆட்காட்டி விரலை தூக்கி மிரட்டினாள் கவி. அவளிடம் புன்னகையுடன்,

"அப்படி போறதா இருந்தா ரெண்டு வயசுலயே போயிருப்பேனே மூக்கி! நீ சொல்ற வரைக்கும் இந்த இடத்தை விட்டு வேற எங்கயும் அசைய கூட மாட்டேன். போதுமா?" என்றான் சிரிப்புடன்.

"கரெக்டா லாக் ஆகிட்ட மச்சான்! உட்காரு. நிறைய பேசணும்!" என்று நாற்காலியை கைகாட்டினாள் கவிப்ரியா.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now