"ஏன் ஷைலு என் வயித்துல உதைச்ச...... இட்ஸ் பெய்னிங்!" என்று முணங்கியவாறு பவின் கட்டிலில் உருண்டு கொண்டு இருந்தான். பவின் அவளைக் கட்டிக் கொண்டது பிடிக்காமல் ஷைலு அவன் காலில் ஒரு மிதி மிதித்து விட்டு சற்று வாகாக இடம் கிடைக்கவும் அவனது வயிற்றில் தன் முழங்காலால் ஒரு உதை வேறு விட்டு கையில் இல்லாத தூசியை தட்டிக் கொண்டு இருந்தாள்.
"ஏய் நான் உன்னைத் தான் வாயை மூடிட்டு இருக்கச் சொன்னேன்டா, சின்னதா ஒரு வார்த்தை மாறிட்டா அட்வான்டேஜ் எடுத்துட்டு பக்கத்துல வருவியா? வருவியாடா?" என்று கேட்டு பின்புறத்தில் வேறு நான்கு உதைகள் அவனுக்கு விழுந்தது.
பவின் சற்று நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து அவளருகில் வந்து, "இந்த மாதிரி உங்க பார்கவ் அத்தான் உங்கிட்ட பிஹேவ் பண்ணியிருந்தா என்ன செஞ்சிருப்ப ஷைலு?" என்று கேட்டவனை மேலும் கீழும் பார்த்தவள்,
"லூசா நீ? எங்க பாகி அத்தான் என் பக்கத்துல உட்கார்ந்தா கூட எப்பவும் இரண்டடி தள்ளி தான் உட்காருவாங்க.
அவங்களை போய்.... எப்படி தப்பா பேசிட்டு இருக்க, இன்னும் ரெண்டு அறை வேணுமா உனக்கு?" என்று கேட்டு கையை முறுக்கினாள்.அவளருகில் அவன் மூச்சுக்காற்று உரசும் அளவுக்கு பக்கத்தில் வந்து நின்றவன், "நான் அவரை தப்பா பேசல, தப்பு பார்கவ் மேல இல்லன்னு சொல்றேன். அவரோட லெவல்ல அவர் கரெக்டா தான் இருந்துருக்காரு. தப்பு முழுக்க முழுக்க உன் மேல தான். எனக்கு ஒரு டவுட் ஷைலு..... உங்க வீட்ல எல்லாரும் ரூபி அப்படி, ரூபி இப்படின்னு பயங்கரமா பில்டப் குடுக்குறாங்களே...... அப்படி அவங்க பில்டப் குடுக்கற அளவுக்கு உங்கிட்ட ஸ்பெஷலா ஒண்ணுமே இல்ல போலிருக்கே......." என்றவன் மார்பில் கை வைத்து தன்னிடமிருந்து சற்று தூர நகர்த்தியவள்,
"மிஸ்டர் பவின், ஒருத்தரை பாயிண்ட் அவுட் பண்ணி அவங்க தப்பை சொல்லிடுறது ரொம்ப ஈஸி. பட் அத சொல்றதுக்கு நீ தகுதியானவனான்னு முதல்ல யோசிக்கணும். அப்படி
எங்கிட்ட ஸ்பெஷலா என்ன இல்ல? கொஞ்சம் நீயே சொல்லிடேன் கேப்போம்!" என்று அவனிடம் கேட்டு விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டவளிடம்,
YOU ARE READING
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Romanceபூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்...