💟 ஜீவாமிர்தம் 47

2.2K 142 49
                                    

இனியா இசக்கிராசுவின் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்று இன்று திருமணத்திற்கு வருகை தந்த அனைவரையும் இரு வீட்டார் சார்பாகவும் ஜெய்நந்தன் குடும்பத்தினர் வரவேற்று கொண்டு இருந்தனர்.

ஜீவா, பார்கவ், ராகவ், மூவரும் மாப்பிள்ளை வீட்டினரை வணங்கி வரவேற்று கொண்டிருக்க அவர்களுக்கு எதிர் வரிசையில் நின்று கவிப்ரியா, அபிநயா, ஷைலு மூவரும் பெண் வீட்டார் சார்பாக அழைத்திருந்த சொந்தங்களை வரவேற்று உள்ளே அமர வைத்து கொண்டிருந்தனர்.

ஜெயந்தன், பத்மா, ஜெய் நந்தன், நிர்மலா ஆகியோர் மாப்பிள்ளை வீட்டினரை ஒவ்வொருவராக சாப்பிட அழைத்து சென்று கொண்டிருக்க மீராவும், கீதாவும் இனியாவின் அலங்காரத்தில் உதவிக் கொண்டு இருந்தனர். அர்ஜுன், பலராம் திருமணத்திற்கு வந்திருந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் இருக்கை வசதிகள், மாப்பிள்ளை வீட்டினரின் நெருங்கிய உறவினர்களுக்கு அறை வசதிகள் என்று கவனித்து கொண்டிருக்க விவேக் தன் வாழ்வில் முதன் முறையாக தான் என்ன வேலை செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

ராசுவின் அறைக்கதவை தட்டியபடி உள்ளே சென்றவரிடம், "விவேக்கு மாமா..... என்னய்யா மவளுக்கு கல்யாணம், உம்முகத்துல சந்தோஷத்தையே காணும்; இந்த எடுபட்ட பக்கிக்கெல்லாம் எம்பொண்ணை கட்டிக் குடுத்து விளங்குனாப்லதேன்னு விசனப்படுறியா?" என்று கேட்ட தன் மருமகனிடம் அவசரமாக மறுப்பு தெரிவித்து,

"அப்படி எல்லாம் நான் நினைக்கல மாப்பிள்ளை, இனுக்குட்டி இனிமே உங்க பொறுப்பு! அவள எப்பவும் சந்தோஷமா நீங்க தான் பார்த்துக்கணும், ப்ளீஸ்!" என்று சொல்லி கைகூப்பியவரின் கைகளைப் பற்றிக் கொண்டு,

"இந்த தறுதலைக்கெல்லாம் எவமுலே நம்ம புள்ளய கட்டிக் குடுக்கிறதுன்னு நிறைய பேர் என் காது படுறாப்லயே பேசியிருக்காங்க மாமா! மில்லுல, கடையில, தோட்டத்துலன்னு பத்து இருபது பேரு நம்பட்ட வேலை பார்த்தாலும், ஊரு முச்சூடும் சொந்தபந்தம் இருந்தாலும், நான் தலைவலின்னு படுத்தா இம்புட்டு நாளா தடவிக் குடுக்க ஆளில்லை. அவளை தூக்கிட்டு போறப்போ மாமன் பொண்ணு அழகா இருக்கா; நமக்கு இவள கட்டிக்கிட உருத்து இருக்குன்னு நினைச்சுதேன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் மாமா.
ஆனா ஊருக்கு வந்திருந்தப்ப மொறச்சிக்கிட்டே இருந்தாலும் உனக்கும் ஆச்சிக்கும் ஏதாவது ஒண்ணுன்னா இனிமே நான்தேன் பார்த்துக்கணும்னு சொன்னா பாரு; அங்கதான்யா அவட்ட மொத்தமா விழுந்துட்டேன். உம்மவள கல்யாணம் பண்ணிக்கிட்ட பொறவு அவ எங்கம்மைய மாதிரியே என்னைய கைஓங்குறத பார்த்து மெரண்டு ஒருக்கா குறுக்குசந்துலல்லாம் பூந்து ஓடியிருக்கேன் தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னால
மொக்கப்பய கொஞ்சம் அப்படிஇப்படிதேன்..... கையில சிக்குனவன தூக்கி போட்டு மிதிக்குறது, காசு பணம்னா எமன் மாரி ஈவு இரக்கமில்லாம அடிச்சு புடுங்குறதுன்னு ஊருக்குள்ள ரொம்ப ராவடி பண்ணிக்கிட்டு இருந்தேன்தேன், இப்போ என் பொஞ்சாதிய கட்டின பொறவு நான் செஞ்சதெல்லாம் எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுது. நா அவ வாழ்க்கையில தேவையில்லாம புகுந்து உழப்பாம இருந்திருந்தா அவளுக்கு ஏத்த மாதிரி இந்த பவின் பயல மாதிரி ஒருத்தன இவளுக்கும் கல்யாணம் பண்ணி வச்சுருப்பல்ல; நாந்தேன் மாமா உன் பொண்ணு வாழ்க்கையில வலுக்கட்டாயமா நுழைஞ்சுபுட்டேன். ஆனா இனிமேபட்டு இனியா புள்ளைய சந்தோஷமா கண்கலங்காம பார்த்துக்கிடுவேன். அவள மட்டும் இல்ல, அவ குடும்பத்துல இருக்கிற எல்லாரும் இனிமே என் சொந்தக்காரய்ங்க, ஒருத்தனையும் விசனப்பட விட மாட்டேன், எல்லாரையும் என்னால முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா பார்த்துக்கிடுதேன், இது மொக்கை ஒனக்கு குடுக்குற வார்த்தை!" என்று சொல்லி அவர் கைகளில் சற்று அழுத்தம் கொடுத்தவனை பார்த்து கண்கள் கலங்கியவர், "அப்பப்போ நான் அம்பைக்கு வந்து இனுக்குட்டிய பார்த்துட்டு போலாம்ல மாப்பிள்ளை?" என்று கேட்டார். அவரை விநோதமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now