💟 ஜீவாமிர்தம் 33

2.3K 141 52
                                    

கொடைக்கானல் மலையின் அழகையும், ஆனந்த ஸாகரத்தின் செழுமையையும் பார்த்தபடி காரை செலுத்திய பவின் தன் தந்தையிடம், "ஏம்ப்பா..... இவ்வளவு ரிச் ஸ்டேட்டஸ்ல இருக்கிற ஒரு பொண்ணு என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்? நமக்கும் அவளுக்கும் செட் ஆகணுமேப்பா?" என்று கேட்டு ஒரு பயப் பெருமூச்சை வெளியேற்றிய நேரம் அவனது வலது கன்னத்தை ஒரு கிரிக்கெட் பந்து பதம் பார்த்து விட்டு காருக்குள் விழுந்தது.

"அம்..........மா!" என்று வலியில் முணங்கியவன், அனிச்சை செயலாக காரின் வேகத்தை குறைத்து ஓரமாக நிறுத்தி இருந்தான்.

"என்னாச்சு வினு? ஆர் யூ ஆல்ரைட் கண்ணா......?" என்று சற்று பதட்டமடைந்த ராகினியிடம்,

"நோ மாம்! ஐ'ம் நாட் ஆல்ரைட். ச்சை வந்த இடத்தில ப்ளடி பீப்பிள் ப்ரோக் மை சீக் போன்ஸ்! இட்ஸ் ஹர்ட்டிங் மாம்!" என்று கன்னத்தை தடவியவனிடம்,

"ரொம்ப பேசுனல்ல..... அதுதான் அடி விழுந்திருக்கு தம்பி, உங்கம்மா வீட்ல போய் ஏதாவது பர்ஸ்ட் எய்ட் பார்த்துடுவா. டோண்ட் வொர்ரி மை சன்!" என்று அவனை சமாதானம் செய்தார் கௌதமன்.

ஜெய்நந்தன், நிர்மலா, ஜீவானந்தன், விவேக் நால்வரும் கௌதமன் குடும்பத்தை மரியாதையுடன் வரவேற்றனர். ஜெயந்தன் தான் அனைவரையும் ஒன்றுதிரட்டி பெரிய அளவில் பெண் பார்க்கும் படலம் என்று அறிவித்து பவினையும், ஷைலஜாவையும் சங்கடப்பட வைக்க வேண்டாம் என்று சொல்லி அர்ஜுன், பலராம் வருகைக்கு தடை விதித்து விட்டார். தானும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

"டேய் ஜெய் நமக்குள்ள என்னடா பார்மாலிட்டீஸ்..... பி கேஷுவல் டா!" என்று கௌதமன் சொல்ல ஜெய் நந்தன் வேகமாக தன் மனைவியை ஒரு பார்வை பார்த்தார்.

தன் தந்தை, தாயை உள்ளே செல்ல சொன்ன பவின், "பேசிட்டு இருங்க, இந்த கிரிக்கெட் ஆடுற கேங்கோட எனக்கு கொஞ்சம் பர்சனல் வென்ஜென்ஸ் இருக்கு. அதை முடிச்சிட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு அவர்களின் அருகில் சென்றான்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now