💟 ஜீவாமிர்தம் 2

5.9K 155 24
                                    

ஜீவாவின் அருகில் வந்த விஷயத்தை பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்த அர்ஜுனிடம்,

"அப்புறம்.... எப்போ எஸ்டேட்டுக்கு பேக்கிங்? பண்ணையார் பத்து நாள் முன்னாடியே வந்து குடும்பம் மொத்தத்தையும் திருவிழாவுக்கு சீர் குடுத்து இன்வைட் பண்ணிட்டு போயிருப்பாரே? உனக்கு ஏதாவது செமையா கிடைச்சதா மாம்ஸ்?" என்று கண்சிமிட்டி புன்னகைத்தவனிடம் கோபத்துடன்,

"என்னடா எப்போ பார்த்தாலும் கிண்டல் பேசி விளையாடிட்டு..... இந்த ஃபங்ஷன்க்காவது மலைக்கு வாடா! நிர்மலாவை நான் என் தங்கச்சியா நினைக்கறேன்டா; முதல்ல எல்லாம் உங்கப்பன் அவளை பாடாய் படுத்தினான்! இப்ப அதே வேலையை நீ செய்யுற; நம்ம குடும்பத்துல எல்லாரும் ஒண்ணா சேர்ந்து இருக்கிறப்ப நீ மட்டும் அங்க இல்லன்னா உங்க அம்மா மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சியா ஜீவாம்மா?" என்று பயந்த படி கேட்டவரிடம் பதில் ஏதும் சொல்லாமல் கற்சிலை போல் அமர்ந்திருந்தான் ஜீவானந்தன்.

"ஜீவா....ம்மா!" என்று பம்மியபடி அழைத்த தன் மாமனின் அழைப்பு காதில் விழுந்தது தான் தாமதம்.... தன் முன் இருந்த கண்ணாடி டம்ளரை தன் கையில் எடுத்துக் கொண்டு டீப்பாயை ஓங்கி தன் பலம் கொண்ட மட்டும் குத்தினான் ஜீவா.

கண்ணாடி டம்ளருடன் டீப்பாயில் ப்ளேட்டில் இருந்த ப்ரெஞ்ச் ப்ரைஸ், இவையெல்லாம் தாறுமாறாக சிதறி கிடந்தது. டம்ளர் உடைபட்டு, டீப்பாயை லேசாக சேதம் செய்து, ஜீவாவின் வலது கையில் இருந்து குருதி வழிந்து கொண்டிருக்க அர்ஜுன் பதறியவாறு "ஐயோ கடவுளே.....கிறுக்கா! என்னடா இப்படி பண்ணிட்ட.....மல்லிகா அக்கா சீக்கிரம் பர்ஸ்ட் எய்ட் கிட்டை எடுத்துட்டு இங்க வாங்க!" என்று உட்புறம் குரல் கொடுத்து விட்டு தன் கைக்குட்டையால் ஜீவாவின் காயத்தை சுற்றிக் கட்டிக் கொண்டு இருந்தார்.

ஆனால் ஜீவா எதைப் பற்றிய பிரக்ஞையும் இல்லாமல் அந்த நிலையிலும் கண்கள் மூடி அமைதியாக அமர்ந்திருந்தான். மனக் கண்ணில் பதினேழு வயதில் நடந்த சம்பவம் நிழலாக ஓடிக் கொண்டு இருந்தது.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Donde viven las historias. Descúbrelo ahora