💟 ஜீவாமிர்தம் 39

2K 138 51
                                    

மணப்பெண்ணின் அலங்காரத்தில் தன் காதலனையே கைப்பிடித்த பூரிப்புடன் அமர்ந்திருந்த அபிநயாவிடம், "இப்போ உன் கைவலி பரவாயில்லையா அபி? அன்னைக்கு நாங்க சொல்ல சொல்ல கேக்காம உங்க மாமா எங்களை அவரோட கூட்டிட்டு போயிட்டாரு, இப்போ உங்க அக்கா நாங்க அவ வீட்டுக்கு போனதால தான் அவ வீட்டுக்காரருக்கு அடிபட்டுடுச்சு, அவங்க காருக்கு செலவு செய்ய வேண்டியதா போச்சுன்னு சொல்லி எங்கள மறுபடியும் வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டா!" என்று சொன்ன தன் தாயிடம்,

"அக்கா அதனால உன்னை விட்டுட்டு போயிருக்க  மாட்டாம்மா! இன்னும் ஒரு வாரத்துல என் சம்பளத்தை நீ வாங்கணும்ல.....அதுக்கு விட்டுட்டு போயிருப்பா, கவலைப்படாதம்மா  மாசம் பிறந்தா மூணாம் தேதி கரெக்டா என் சம்பளத்தை உங்க வீட்டுக்கு வந்து குடுத்துர்றேன், என்னைய கஷ்டப்பட்டு பெத்து குடுத்துருக்க பாரு.....அந்தக் கடனை குடுக்கணும்னு வாழ்க்கை முழுசும் எனக்கு நியாபகம் இருக்கும், மறந்துட மாட்டேன், உங்க வீட்ல என்னோட இடம் எதுன்னு எனக்கு நல்லா தெரிஞ்சுடுச்சு, அதை எனக்கு புரிய வச்சதுக்காக உனக்கும் அப்பாவுக்கும் ரொம்ப தேங்க்ஸ் மா..... இனிமே உன் லைஃப்க்குள்ள, உன் பொண்ணுங்க ரெண்டு பேரு லைஃப்க்குள்ள அநாவசியமா நானும் என் வீட்டுக்காரரும் வர மாட்டோம், ஏதாவது பங்ஷன், இல்ல உடம்பு சரியில்லைன்னா சொல்லு, வந்து வேலை பார்த்து குடுக்குறேன்!" என்று தன் அன்னையிடம் கைகூப்பினாள் அபிநயா.

"ஏய் என்ன ஓவரா வாயாடுற...... கல்யாணம் ஆகிடுச்சுங்கிற திமிராடீ உனக்கு?" என்று கேட்ட தன் அன்னையிடம்,

"ஆமாம்மா திமிரு தான். இவ்வளவு நாள் அந்த வீட்ல நான் ஒரு சேர், ஸோஃபா, டேபிள் மாதிரி கிடந்தப்போ இந்த திமிரு வரல.... உண்மையான அன்போட எனக்கு ஒண்ணுன்னதும் பதறிப் போன நாலு பேர் கூட இருந்ததுனால திமிரு எட்டிப் பார்க்குது. நான் உனக்கு வேண்டாம்ன்னா அத நீ என்னை பெத்துக்குறதுக்கு முன்னாடி உன் புருஷன் கிட்டயே சொல்லியிருக்கலாமே...... மூத்தவளையும், இளையளையும் மாதிரி நடுவுல பிறந்தவளும் மருந்துக்காவது பாசத்தை தேடுவான்னு நீ நினைக்கலயா..... இதோ வர்றாரு பாரு இவர்ட்ட என் கேள்விக்கு பதில் இருக்கான்னு கேளு!" என்றாள்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now