💟 ஜீவாமிர்தம் 38

2K 133 47
                                    

சென்னை நகரின் ஒரு பிரபலமான திருமண மண்டபம் சரஸ்வதி குடும்பத்தினரின் வருகையால் களை கட்டியது. பார்கவ் வெட்ஸ் அபிநயசரஸ்வதி என்ற முகப்பு பதாகைகள் பக்கத்தில் நின்று கொண்டு பலராமிடம்,

"என்ன மிஸ்டர் பலராம், பையனுக்கு பத்து நாள்ல கல்யாணம்ன்னு திடுதிடுப்புன்னு அரேன்ஜ்மெண்ட்ஸ்லாம்..... பையன் பொண்ணை கூட்டிட்டு
ஓடிப்போறது மாதிரி ஏதாவது கசமுசா ஆகிடுச்சா?" என்று கேட்ட தன் தொழில் நண்பரிடம் முயன்று வரவழைத்த சிரிப்பை கஷ்டப்பட்டு பலராமும் கீதாவும் தந்து கொண்டிருக்க,

"அங்கிள் அது என்ன கதைன்னா எங்க அண்ணனுக்கு இன்னும் ரெண்டு நாளைக்குல்ல கல்யாணம் பண்ணி வைக்கலன்னா எங்க குடும்பத்துல பொறக்குற குழந்தைங்க எல்லாமே டபுள்ஸா ஐ மீன் ட்வின்ஸா பொறக்குமாம். இருக்குற பாப்புலேஷன்ல எல்லாருக்கும் ரெண்டுன்னா எங்க போறது? அதான் எங்க குடும்ப ஆஸ்தான ஜோதிட சிகாமணி ஸ்ரீலஸ்ரீ ஜெயநந்தானந்த சுவாமிகள் ஆசிர்வாதத்தோட இன்னிக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டோம், நீங்க வாங்க நம்ம சாப்பிட போகலாம்! அப்புறம் இவங்க உங்க பொண்ணா.....பேத்தியா? என்ன படிக்கிறாங்க?" என்று கேட்டுக் கொண்டே அவரைத் தள்ளிக் கொண்டு சென்றவனை சிரிப்புடன் பார்த்த பலராம்,

"ஏய் க்யூட்டி சின்னவன் என்னடீ போறபோக்குல உங்க அண்ணனை ஜோசியக்காரனாக்கிட்டு போறான்.... இவன எங்க விட்டாலும் வாயால பிழைச்சுக்குவான்டீ!" என்று சொன்னவரிடம் சலிப்புடன்,

"காலையில இருந்து எல்லாருக்கும் எத்தன கதை சொல்லி சமாளிச்சுருக்கு ராம் கண்ணா? முடியல. இந்த அண்ணா, அண்ணி, ஷைலுவை வேற இன்னும் காணும்..... அப்பா அம்மாவுக்கு வந்தவுடனேயே பங்ஷன் அட்டெண்ட் பண்றது எப்படியிருக்குமோ தெரியல. நம்ம ஜீவாக்குட்டியும், லட்டுவும் இல்லாம எனக்கு வேலையே ஓட மாட்டேங்குது. நீங்க இங்க பார்த்துக்குறீங்களா? நான் போய் பந்தியில எல்லாருக்கும் ஒரு கும்பிடு போட்டு சாப்பிட வச்சுட்டு மாமா, மீரா, கவிம்மா என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு வர்றேன்!" என்று அவரிடம் சொல்லி விட்டு கால் மாற்றி நின்று கொண்டு இருக்க பலராம் தன் மனைவியிடம்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now