💟 ஜீவாமிர்தம் 59

2.2K 128 54
                                    

"பாருடா ராகவ் பாகியே என்னைப் பார்த்து எப்படி பேசுறான்னு...... ஜீவாவை நான் எவ்வளவு லவ் பண்றேன்னு இவனுக்கும் புரியல, அத ஜீவாக்கு கூட இனியா ஹஸ்பெண்ட் தான் வந்து விளக்க வேண்டியதிருக்கு, அது தான் என் கோபம், நான் கோபத்துல கொஞ்சம் வார்த்தைகளை தப்பா பேசிட்டேன் தான்..... ஆனா ஜீவா சொன்ன மாதிரி என்னோட குற்ற உணர்வால ஒண்ணும் இல்லாத அவனுக்கு வாழ்க்கை குடுத்தேனெல்லாம் நான் சத்தியமா நினைக்கல. இனியா கல்யாணத்தன்னிக்கு மனசுல ஏதோ ஒரு தவிப்பு! எங்க கல்யாணம் கூட அன்னிக்கே நடந்துடுச்சுன்னா நிம்மதியா இருக்கும்னு தோணுச்சு. ஆனா மாமா அத்தைய தவிர அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி, பாகி, ஏன் ஜீவா கூட என் கிட்ட பேச மாட்டேங்குறான். இப்படியெல்லாம் என்கிட்ட யாரும் இதுவரைக்கும் முகத்தை தூக்கி வச்சுட்டு இருந்ததே இல்ல. எனக்கு இது பிடிக்கல. எங்கையாவது தனியா போய் உட்கார்ந்துக்கணும் போல இருக்கு!" என்று சொல்லி விட்டு கண்கலங்கிய தன் அக்காவின் தோளை தட்டிக் கொடுத்து சமாதானம் செய்த ராகவ்,

"ஒரு வார்த்தைய பேசறதுக்கு முன்னால இதை பேசினா என்ன பின்விளைவு வரும்னு யோசிச்சுட்டு பேசினா எந்த பிரச்சனையுமே இல்ல கவி, நீ ஜீவாட்ட இவ்வளவு ஹார்ஷான வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணினா மச்சானுக்கு அவர் யோசிச்ச மாதிரி தாட் வரத்தான் செய்யும். சின்ன வயசுல இருந்து கூடவே இருந்த நம்ம அத்தை பொண்ணு தானே, எப்போ கல்யாணம் பண்ணிகிட்டா என்னன்னு நீ கேட்டவுடனே உன்னை கல்யாணம் பண்ணிகிட்ட உன் ஹஸ்பெண்ட்டுக்கு நீ இன்னும் கொஞ்சம் ஸ்பேஸ் குடுத்து உன் மனசுல இருக்கிற விஷயத்தை சொல்லி இருக்கணும். ஒருத்தர் மேல காதல முரட்டுத்தனமா காட்டலாம்மா. பட் கோபத்தை ரொம்ப ரொம்ப கவனமா காட்டணும், எனக்கு பெரியப்பா வாங்கி குடுத்த புரபொஸர் வேலை செட் ஆகல கவி, இன்னும் பத்து நாள்ல நான் சிங்கப்பூருக்கு கிளம்பறேன். மாலிக்குலர் பயாலஜில ரிசர்ச் அனெலிஸ்ட் போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணியிருந்தேன். அவங்கட்ட இருந்து கால் லெட்டர் வந்திருக்கு. ஸோ நான் கிளம்பணும். இப்போ நீ இருக்கிற மூடுக்கு உனக்கு அப்ஜெக்ஷன் இல்லன்னா நீயும் என் கூட வா. பதினைஞ்சு நாள் இல்ல ஒன் மன்த் அங்க இரு, தப்பு உங்க ரெண்டு பேரு மேலயும் தான் இருக்கு, பெரியவங்க ஒண்ணும் முட்டாள் இல்ல கவி. பொதுவா எந்த வீட்லயும் தராத சுதந்திரத்தை அவங்க நமக்கு குடுத்திருந்தாங்க, விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து எந்த வித வித்தியாசமும் காட்டாம ஒண்ணாவே இருக்க அலவ் பண்ணியிருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் இஷ்டத்துக்கு ஒரு முடிவை எடுத்துட்டு திடீர்னு அதுலயும் பிரச்சனை வந்தா எல்லாரும் எப்படி தாங்குவாங்க? பெரியவங்க கோபத்துல எல்லாம் தப்பே இல்ல, நிர்மலா அத்தை வந்து என்னத்த பொண்ணு வளர்த்து வச்சிருக்கே மீரான்னு பெரியம்மாவ பார்த்து கேட்டிருந்தாலோ, இல்ல பெரியம்மா ஜீவா மச்சான என்ன வேலை பண்ணி வச்சிருக்கன்னு கை நீட்டியிருந்தாலோ இவ்வளவு நாள் குடும்பத்துல காப்பாத்தி வச்சிருந்த யூனிட்டி காணாம போயிருக்கும், நல்ல வேளை எல்லாரும் அடுத்தவங்கள படுத்திடக் கூடாதுங்கிறதுல ரொம்ப கவனமா இருக்காங்க...... ஜெய் மாமாட்ட நான் பேசட்டுமா கவி?" என்றவனிடம் பதில் சொல்ல முடியாமல் கவிப்ரியாவிற்கு பொங்கி பொங்கி அழுகை தான் வந்தது.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें