💟 ஜீவாமிர்தம் 61

2.2K 122 21
                                    

"நாளைக்கு நைட் ரிஷப்ஸன் முடிஞ்சதும் ஊருக்கு கிளம்பணும்னு நினைச்சாலே எரிச்சலா வருது. வாணிம்மா ரூபி கல்யாணத்துல நல்லா என்ஜாய் பண்ணியா? எல்லார் கூடவும் மிங்கிள் ஆகி நீ ரொம்ப ஜாலியா இருந்தத பார்த்து எனக்கு சந்தோஷமா இருந்தது!" என்று சொன்ன பார்கவை பார்த்து சிரித்தாள் அபிநயசரஸ்வதி.

"ஒண்ணுமே சொல்லாம இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்டீ..... ராசுப் பையன் இந்த வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையாம், ஜீவா சின்ன பையனாம். அவன் இதெல்லாம் செய்ய கூடாதாம், நம்மள வேலை செய்ய வைக்கிறதுக்கு எங்க மாமா எப்படியெல்லாம் பிட்டை போடுறாருன்னு பாரு.... அந்த ஜீவா எருமைக்கும் தான் கல்யாணம் ஆகிடுச்சு தானே, அவன இதெல்லாம் செய்ய சொன்னா என்னவாம்?
ரூபிக்காக தான் இதெல்லாம் செஞ்சுட்டு இருக்கேன். இல்லைன்னா அப்பவே உன்னை தூக்கிட்டு நம்ம ரூமுக்குள்ள போயிருப்பேன். சீக்கிரம் வேலைய முடி, எல்லாத்தையும் சிற்பி மாதிரி வடிவமைச்சுட்டு இருக்காத...... ச்சை புருஷனோட ஃபீலிங் ஐ கொஞ்சமாவது புரிஞ்சுக்குறியா; எப்போ பாரு அண்ணியோட படுத்துக்குறேன், அத்தை கூட படுத்துக்குறேன்னு எரிச்சலை தான் கிளப்புற.....!" என்று எரிச்சலுடன் ஷைலுவின் அறையை அலங்கரித்து கொண்டு இருந்த தன் கணவனின் வாயை தன் கைகளால் மூடி விட்டு அவன் கன்னத்தில் அழுத்தமான ஒரு முத்தம் பதித்தாள் அபிநயா.

"சும்மா புலம்பாம பேசாம இருக்கணும் மிஸ்டர் பார்கவ்..... ஷைலு ரிஷப்ஸனோட ஜீவாண்ணா ரிஷப்ஸனும் நடக்கப்போகுதுன்னு பெரியம்மா பெரியப்பா அவங்களோட பிஸினஸ் ப்ரெண்ட்ஸ் கேங்க், நிறைய க்ளப்ஸ், நம்ம பேக்டரி டீலர்ஸ், கம்பெனி வொர்க்கர்ஸ் எல்லார் கிட்டயும் போன்லயே இன்வைட் பண்ணிட்டு அவங்க கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாம பயந்து போய் உட்கார்ந்து இருக்காங்க..... கிட்டத்தட்ட நம்ம கல்யாணத்தப்போ ஆன மாதிரி சிச்சுவேஷன் தான் வரும்னு தெரிஞ்சாலும் நிறைய பேர் வர்றப்போ வாய் வார்த்தை எதுவும் தப்பாகிட கூடாதுன்னு டென்ஷன் ஆகுறாங்க. இதுல ஜீவா அண்ணா வேற யாரோ எதுவோ சொல்லிட்டாங்கன்னு ப்ரியா அண்ணிய கூட்டிட்டு ஜெய் பெரியப்பாட்ட பஞ்சாயத்து வக்க போயிட்டாங்க, அஜு மாமாவும், மீரா அத்தையும் ப்ரியா அண்ணி ஜீவா அண்ணாட்ட சரியா முகம் குடுத்து பேச மாட்டேங்குறாங்கன்னு வருத்தத்துல இருந்தாங்க. கேமெல்லாம் விளையாடி இப்போ தான் எல்லாரும் கொஞ்சமா ரிலாக்ஸ் ஆகியிருக்காங்க. வேலைய பார்க்காம உங்களுக்கு இப்போ ரூமுக்கு போகணுமா? உங்க மண்டையிலயே கொட்டுவேன்; ஜீவா அண்ணா ப்ரியாட்ட இந்த வேலையெல்லாம் குடுத்தா அவங்க எம்பாரஸ் ஆக மாட்டாங்களா? சும்மா ஒண்ணும் புரியாம மேலயும் கீழயும் குதிக்க வேண்டியது..... இதெல்லாம் செஞ்சு குடுக்கறது எனக்கு எவ்வளவு ஜாலியா இருக்கு தெரியுமா..... இன்னும் ஜீவா அண்ணா, ராகவ் மேரேஜ்க்கும் இதெல்லாம் நான் தான் செய்வேன். இன்னும் அரை மணி நேரம் வெயிட் பண்ண முடிஞ்சா பண்ணுங்க. இல்லன்னா ரூமுக்கு போய் நல்லா போர்த்திட்டு தூங்குங்க!" என்று சொல்லி விட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தவளை அணைத்துக் கொண்டு, "தேங்க்யூ வாணிம்மா. எனக்கு கல்யாணம் ஆனதுல இருந்து உங்கிட்ட க்ளியர் பண்ணிக்க வேண்டிய ஒரு டவுட்டு இருக்கு. நீ நிஜமாவே உனக்கு பிடிச்சு தான் வேலை பார்க்குறியா? இல்ல உன் அப்பா அம்மாவ காப்பாத்தணும்ங்கிற கமிட்மெண்ட் இருக்குன்னு வேலை பார்க்குறியா?" என்று கேட்டவனிடம் கடுமையாக முகத்தை வைத்து கொண்டு,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now