💟 ஜீவாமிர்தம் 37

2.1K 122 48
                                    

பார்கவ் அபிநயாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்ததும் அர்ஜுன், மீரா, பலராம், கீதா, கவிப்ரியா, சரஸ்வதி அனைவரும் அபிநயாவின் கையைப் பார்த்து பதறி ஆளாளுக்கு கேள்விகள் கேட்டனர்.

"எங்க அண்ணி அடிபட்டுச்சு? கீழே விழுந்துட்டீங்களா?" என்று கேட்ட படி அவளது ஆர்ம் சிலிங் பௌச்சை வருடிக் கொடுத்து கொண்டிருந்த கவிப்ரியாவிடம் மீராவும் கீதாவும்

"கவிம்மா அண்ணிக்கு வலிக்கப் போகுதுடீ; பாகி ரூமுக்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு வா, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கட்டும்; டாக்டர் என்ன சொன்னாங்க அபி?" என்று கேட்ட தன் அத்தையர்களிடம்,

"ஸ்லிப் ஆகி கீழே விழுந்ததுனால வந்த ஃப்ராக்சர் தான் அத்தை; மூணு வாரத்துல சரியாகிடும்ன்னு சொல்லி இருக்காங்க; ஒன் வீக் ரெஸ்ட் எடுத்தாச்சு, இனிமே காலேஜ்க்கு கிளம்ப வேண்டியது தான்! ப்ரியாமா நீ என் கையை கொஞ்ச நேரம் இப்படியே வருடிக் குடுக்குறியா? எனக்கு இது நல்லாயிருக்கு......!" என்றாள் அபிநயா.

"அண்ணி என்னை நம்ம வீட்ல இருக்கிறவங்க யாரும் ப்ரியான்னு கூப்பிட்டதேயில்ல, நீங்க இனிமே இப்படியே கூப்பிடுங்க!" என்றவள் தன் அண்ணனிடம் திரும்பி,

"பாகி நீ அண்ணியை ஏதாவது ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போ. ராகினி ஆன்ட்டி கிட்ட கூட சஜஷன் கேட்டுக்கோ, கை நல்லா சரியாகுற வரைக்கும் காலேஜ்க்கு எல்லாம் போக வேண்டாம் அண்ணி; ஜாலியா வீட்ல இருக்கலாம்! போரடிச்சா நாம ரெண்டு பேரும் போய் உங்களுக்கு, ரூபி, லட்டுவுக்கு புதுசா அவள்ல வெட்டிங் ட்ரெஸ் டிஸைன் பண்ணலாம்!"
என்று சொன்னவளிடம் ராகவ்,

"கவிம்மா போதும், அண்ணி டையர்டு ஆகுறாங்க பாரு; ரூமுக்கு கூட்டிட்டு போய் உன் மொக்கையெல்லாம் போடு, அவங்களுக்கு தூக்கம் வந்துடும், கதவை மூடிட்டு நீ கீழே வந்துடு!" என்றான் ஒரு அழுத்தமான குரலில். அபிநயா சொன்ன விஷயத்தை ஜீரணித்து அதில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சித்து சற்று கோபமாக தான் அமர்ந்து இருந்தான்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now