அன்பின் அர்த்தம்
ஆயிரம் இருக்க
எந்தன் மனதில்
உருவாய் இருக்கும்
அன்பே உன்னை
அர்த்தம் என்பேன்
அர்த்தம் இன்றி
வாழ்க்கை இருக்க
அர்த்தம் எனவே
நீயும் வரவே....
துக்கம் துடைத்து
தோளில் சுமந்து
இன்பம் கொடுத்து
இன்பம் கொண்ட
உயிரே உறவே
நீயே வரமே!!அழகு குறைவென
கூறும் வாயோ
பொய்யே கூறும்
அழகில் இல்லை
குறையது பார்க்கும்
கண்ணில் என்பேன்
காணட்டும் அவன்
எந்தன் கண்ணில்
உந்தன் அழகை...
தேவதை தோற்கும்
என்னவள் வெல்வாள்
அன்பே என்பேரழகே..
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...