பத்தாச் சோறு பசியில் வயிறு
கத்தா உயிரு ஊருக்கு நூறு
செத்தா பாலு வாரம் நாலு
பத்தா துயரென திறந்த பாருதுயரம் தாங்கி உறவுகள் தெரிய
கணினி வழியில் கல்விகள் திறக்க
கண்கள் வலிக்க குழந்தைகள் பார்க்க
இன்னல் நிறைந்த நாட்கள் நகரதளர்வுகள் வந்திட! தேர்வுகள் வந்தன!!
வெறுத்த மனம் சிறுத்த முகம்
கனத்த சுமை பெருத்த சோகம்இதோ பொறுத்தது போதும்
பொங்கி வந்தது புத்தாண்டு
நெருங்கி வந்தது இந்தாண்டுதொடர்ந்து வந்திடும் திருநாளில்
வெளியில் வந்திடும் இன்பங்கள்!!!!!.....போகியில் துன்பங்கள் எரித்து,
பொங்கலில் இனிப்புகள் உண்டு,
காளைகளுடன் காளையர் மோதி,
காணுமில் உறவுகள் மலர,
என்றேஇப் பொங்கல் சிறக்க,
புத்தாண்டு பல்இன்பம் கொடுக்க,
இவ்வாறு எம்மனம் திறக்க,
வாழ்த்தி மகிழ்கின்றேன் !
வார்த்தை முடிக்கின்றேன் !!ps:
21 naaluku apram puthaandu wishes and 7 naatkalukku pinnal pongal wishes solrenae nu nenaika venam. wattpad la konjam lateah update panite erkanavae eluthinathuthaa. so vaasagargal anaivarum thayavu koornthu mannichuuu
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...