வார்த்தைகள் கொண்டு கவிதைகள் திரித்தேன்.
ஆசான் கொண்டு அறிவார்த்தைகள் பெற்றேன்.
பள்ளியைக் கொண்டு ஆசான் பெற்றேன் -அங்கு
நண்பனைக் கொண்டு நட்பை பெற்றேன்.
வெற்றியை கொண்டு மகிழ்வினை பெற்றேன்,
தோல்வியை கொண்டு வலிமையை பெற்றேன்,
புத்தகம் கொண்டு அறிவைப் பெற்றேன்,
பேனாவை கொண்டு திறன்களை பெற்றேன்,
பெற்றேன் பெற்றேன் இன்பங்கள் பெற்றேன்,
இன்பத்தில் இன்பம் பள்ளி வாழ்வென உணர்ந்தேன்
-சகோ
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...