💟 ஜீவாமிர்தம் 71

Start from the beginning
                                    

"ஸ்ரீ நான் உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.....!" என்று சொன்ன தன் மனைவியை முறைத்தவர்,

"இல்ல தெரியாம கேக்குறேன்..... என்னை பார்த்தா உங்க எல்லாருக்கும் கோலிக் குண்டு மாதிரி தெரியுதா? ஆளாளுக்கு உருட்டி விளையாண்டுட்டு இருக்கீங்க!
உன் உத்தம புத்திரன் அவனுக்கு ரிஷப்ஸன் வச்சுடலாம்ன்னு சொன்ன அஞ்சாவது நிமிஷம் என் முன்னாடி வந்து ரிஷப்ஸனோட நிறுத்திக்கங்க, அதுக்கு மேல எதுவும் ப்ளான் பண்ணாதீங்க, எங்க லைஃப் ஐ எப்போ ஸ்டார்ட் பண்ணனும்னு நாங்க டிஸைட் பண்ணிக்குறோம்னு என் காதை கடிச்சுட்டு போயிட்டான். இத எங்க சித்தப்பா கிட்ட சொன்னா உங்க இஷ்டத்துக்கு எப்படி வேணும்னாலும் ஆடுங்கன்னு அவர் என்னைய பிடிச்சு கிழிச்சுட்டு போனாரு. அவன் பொண்டாட்டிக்கு ஷாப் ஓப்பன் பண்ணி தரணும்னு ஆசைப்பட்டத உன் பையன் உங்கிட்ட தானே சொன்னான்; இப்போ நீ கேக்க நினைக்குற கேள்விய அவன் கிட்டயே கேளு; இல்ல மலையில வந்து தங்கணும்னு முடிவெடுத்ததுக்கப்புறம் ஏதோ ஒரு மினி ஹவுஸ்ல போய் தங்கப் போறேன்னு உங்கிட்ட மட்டும் சொன்னாரே உங்க அர்ஜுன் அண்ணா.... அவர் மாப்பிள்ளைட்ட அவரை பேசச் சொல்லு! அத விட்டுட்டு எதுக்கு எடுத்தாலும் என்னைய கோர்த்து விடாத; எனக்கு நிறைய வேலை இருக்கு!" என்று சொல்லி விட்டு கட்டிலில் ஒருக்களித்து படுத்துக் கொண்டவரை பார்த்து சிரித்துக் கொண்டார் நிர்மலா.

"ச்சை இந்த நரசிம்மமூர்த்திட்ட போய் ஒரு முக்கியமான வேலைய செய்ய சொன்னேன் பாரு; என்னை சொல்லணும்! லிஸன் ஜெய் ஸார்..... என்னோட கேள்விக்கு நானே விடை தேடிக்கறேன். அதுவும் இப்பவே... இண்டர்காம்ல நந்துவை கூப்பிடவாவது செய்றீங்களா?" என்று கேட்ட தன் மனைவியை கோபப்பார்வை பார்த்தார் ஜெய் நந்தன்.

"இண்டர்காம்ல கையை வைக்கிறதுக்கு முன்னாடி வாட்சை பாரு நிலாக்குட்டி..... ராத்திரி பத்து மணி; உனக்கு ஏன் இன்னிக்கு சீக்கிரம் தூக்கம் வரல? வா என் பக்கத்துல வந்து படுத்துக்கோ. ஆனந்த்ட்ட காலையில பேசிக்கலாம்!" என்று சொல்லி தன் மனைவியை அழைத்தார் ஜெய் நந்தன்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now