💟 ஜீவாமிர்தம் 61

Start from the beginning
                                    

"இப்போ எதுக்கு திடீர்னு இப்படி ஒரு கேள்வி? எனக்கு வேலை பார்க்க பிடிக்கல தான். ஓடி ஓடி ரன் எடுக்குறது மாதிரி பதினேழு வயசுல இருந்து அடுத்து என்ன அடுத்து என்னன்னு தேடி தேடி லைப் ரொம்ப பிஸியா போயிடுச்சு. சரி நமக்கு நம்ம கவி கூடவே கல்யாணம் ஆகிடுச்சு..... இனிமே அவர் நமக்காக எல்லாத்தையும் பார்த்துப்பாரு. நம்ம கொஞ்சம் ரிலாக்ஸ்டா வீட்ல இருக்கிறவங்க எல்லாரையும் கவனிச்சுட்டு ஜாலியா இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா கல்யாணத்தன்னிக்கே நீங்க என் அப்பா அம்மாவை பார்த்து அவ்வளவு கோபப்பட்டீங்க! என்ன தான் கோபம் இருந்தாலும் பெத்தவங்க இல்லையா..... பாதியில விட்டுட்டு வர மனசு கேக்க மாட்டேங்குது. ஆமா ஜாலியான நேரத்துல எதுக்கு நம்ம இதெல்லாம் பேசிட்டு இருக்கோம்...... ம்ம்....ம்ம்! சரி ஒரு கிஸ் குடுங்க, நீங்க மட்டும் வாங்கிட்டு எனக்கு திருப்பிக் குடுக்கலைன்னா என்ன அர்த்தம்?" என்று கேட்ட தன் மனைவியிடம் பற்கள் தெரிந்த சிரிப்புடன்,

"உங்கிட்ட நான் கிஸ் கேட்டேனா? எனக்கு நீயா குடுத்துட்டு அத திரும்ப கேட்டா நாங்களும் குடுக்கணுமா? இவ்வளவு நாளா மனசுல இருந்ததெல்லாம் ஏன்டீ என்கிட்ட சொல்லல..... காலேஜ் போகாம சும்மா வீட்ல உட்கார்ந்துட்டு இருந்தா உனக்கு போரடிக்குமே.... அதுக்கு என்ன வாணிம்மா பண்றது?" என்று சற்று கவலையுடன் கேட்ட தன் கணவனிடம் சிறு புன்னகையுடன், "நான் முன்னாடியே யோசிச்சு வச்சுட்டேன் கவி.... சரஸ் பாட்டியை கொஞ்சம் பிஸிக்கலி ஸ்டெப்லைஸ் பண்ணிட்டு அவங்களுக்கு ஆப்ரேஷன் பண்ணி முடிச்சிடணும். அவங்களுக்கு இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஒரு பொய்யான நம்பிக்கைய குடுக்கறது? சில நேரம் ரொம்ப தடுமாறி மனசு வருத்தப்படுறாங்க தெரியுமா?" என்று சொன்னவளை ஏற இறங்க பார்த்து விட்டு, "மனசுக்குள்ளயே ப்ளான் எல்லாம் ரெடி பண்ணிட்டு இவன் எப்படா நம்ம கிட்ட வாயை குடுப்பான்னு உட்கார்ந்து இருந்துருக்க இல்லடீ....? உன்னைய பெத்த ஒரே ஒரு நல்ல விஷயத்துக்காக உங்க அப்பா அம்மாவ நான் கவனிச்சுக்குறேன் வாணிம்மா..... பட் மாசா மாசம் பணத்தை உன் கையில தான் குடுப்பேன். அத அவங்களுக்கு குடுக்கறதெல்லாம் நீ தான் பார்த்துக்கணும். சரியா?" என்று கேட்ட தன் கணவனிடம் மறுப்பாக தலையசைத்து விட்டு, "இப்ப இவன் யார் கிட்டயோ வாயை குடுப்பானான்னு யாரோ பார்க்குறாங்களாம் கவி..... அந்த ட்யூப் லைட் கரெக்டா வொர்க் பண்ணுதாப்பா?"என்று கேட்ட தன் மனைவியை முறைத்தவன், "என்னையே குடுத்துட்டேன்.... இன்னும் என் செல்லப் பொண்டாட்டி எது கேட்டாலும் குடுக்க மாட்டேனா? ட்யூப் லைட் சரியா வொர்க் பண்ணுதானா கேக்குற! பக்கத்துல வந்து பாரு, ஷாக் அடிக்கும்! ஊரையே ரவுசாக மாத்தி போற நீ கலைவாணி பேத்தி....." என்று பாடிக் கொண்டே அபியின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டு அவளது செவ்விதழ் மேலும் சிவக்க வைத்தான் பார்கவ்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now