💟 ஜீவாமிர்தம் 59

Start from the beginning
                                    

"கவி ப்ளீஸ்டா நீ அழுதா ஜீவாவுக்கு மட்டுமில்ல, எனக்கும் தான் வலிக்குது!" என்று சொன்ன தன் தம்பியை பார்த்து தன் கண்ணீரை துடைத்து கொண்டு பெருமூச்சு விட்ட கவிப்ரியா,

"எப்படிடா என்னை விட சின்னவனா இருந்துட்டு உன்னால இவ்வளவு மெச்சூர்டா பேச முடியுது? வயசுக்கும் மெச்சூரிட்டிக்கும் எந்த கனெக்ஷனும் இல்லையோ? ஏன் எதுக்குன்னு தெரியாம பண்ணி தான் பார்ப்போமேன்னு நினைச்சு அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா கல்யாணத்துக்கு தேவையான புரிதலோ, விட்டு கொடுக்கற தன்மையோ இன்னும் எனக்குள்ள வரவேயில்ல போல.... ஆல்ரைட்!
நான் ஜீவாவை எவ்வளவு லவ் பண்றேன், அவனை எவ்வளவு மிஸ் பண்றேன்னு நானே செல்ஃப் அசெஸ் பண்ணிக்குறதுக்கு இந்த கேப் எனக்கு கண்டிப்பா வேணும்னு தோணுது. இதனால அவனோட காம்ப்ளக்ஸும், என்னோட கில்ட்டி ஃபீலும் எங்கள விட்டு போகும்னா ஐ'ம் ரெடி ராகவ்! வீட்ல எல்லார்ட்டயும் நானே பேசுறேன்......!" என்று சொல்லி விட்டு தான் எடுத்த முடிவில் எப்போதும் தெளிவாக இருப்பேன் என்று மானசீகமாக சொல்லும் வகையில் நிமிர்ந்த நடையுடன் அங்கிருந்து சென்றாள் கவிப்ரியா.

"அவர விட்டு போறதுக்கு நீ ரெடியாகிட்ட! உன்ன அனுப்பி வைக்கிறதுக்கு அவர் ஒத்துக்கணுமே கவிம்மா?" என்று நினைத்த வண்ணம் ராகவ் தன் நெற்றிப்பொட்டை அழுத்திக் கொண்டிருந்தான்.

மாலை வேளையில் இனியா பூக்களை மாலையாக கோர்த்து கொண்டு இருந்த போது ராசு தன் மனைவியின் அருகில் வந்து அமர்ந்தான்.

"சிட்டுக்குருவி மாமனுக்காக மால கட்டிக்கிட்டு கிடக்குதீகளாக்கும்? இப்போ எதுக்குட்டீ இந்த மாலை?" என்று கேட்ட தன் கணவனிடம் அவசரமாக

"இந்த மாலை ஒண்ணும் உங்களுக்கு இல்ல. ரூபிக்கும் அவளோட மாமாவுக்கும் வைக்க போற டாஸ்குக்காக ரெடி பண்ணிட்டு இருக்கேன். நான் இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான் அப்பத்தாட்ட பேசுனேன். அவசரப்படாம நிதானமா இங்கிருந்து
கிளம்பி வர சொன்னாங்க. நான்
சொல்ல சொல்ல கேக்காம அப்பத்தாவ அம்பைக்கு அனுப்பிச்சு வச்சுட்டீங்க! நாளைக்கு ரூபி ரிஷப்ஸன் முடிஞ்சதும் நம்ம கிளம்பிடணும். தனியா கடைக்கு போயிட்டு வர்றதுக்கு, மில்லை பார்த்துட்டு வர்றதுக்கு எல்லாம் அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்ல ராசு?" என்று கேட்ட தன் மனைவியிடம் கோப அக்னியை வெளியிட்ட இசக்கிராசு,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now