💟 ஜீவாமிர்தம் 57

Start from the beginning
                                    

"அபிக்கு கால் பண்ணி நீ வர இன்னும் அரை மணி நேரம் ஆகும்னு சொல்லு! உன் கூட கொஞ்சம் பேசணும்!" என்று சொன்ன ஜீவானந்தனை பார்த்து தலையில் அடித்து கொண்ட பார்கவ் தன் மனைவிக்கு அழைத்து இரண்டு நிமிடங்கள் பேசி விட்டு சலிப்புடன்,

"உம் பொண்டாட்டியும், எம் பொண்டாட்டியும் சேர்ந்து தான் படுத்துருக்குங்களாம், எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்ல, ஜீவாண்ணா ரூம்ல போய் தூங்குங்கன்னு சொல்றா; போயும் போயும் உன் அத்தை பையனா வந்து பொறக்க என்ன பாவம்டா பண்ணி தொலைச்சேன் நானு...... பதினோரு மாசம்...... பதினோரே மாசம் தான்டா அவள லவ் பண்ணேன்...... அதுக்குள்ள அவ வீட்ல இருக்கிறவங்க அவளுக்கு மண்டையில என்ன மசாலாவ தடவுனாய்ங்களோ தெரியல..... நம்ம ப்ரேக் அப் பண்ணிக்கலாம் கவின்னு......" என்று பேசிக் கொண்டிருந்த பார்கவின் பேச்சை, "ஒரு நிமிஷம் இரு!" என்று சொல்லி நிறுத்துமாறு கைகாட்டிய ஜீவா,

"ப்ரேக் அப் பண்ணிக்கலாம் என்னன்னு......?" என்று கேட்க பார்கவ் தன் வாயில் அடித்துக்கொண்டு,

"அதான்டா பிரிஞ்சுடலாம்னு சொல்லி டாட்டா காமிச்சுட்டு போயிட்டா, எங்க கல்யாணத்துக்கு மறுநாள் கூட லீவ் போட மாட்டேன், சம்பளம் போயிடும்னு சொன்னவள இப்போ தான் கையில காலுல விழுந்து எல்லாரும் வர்றாங்கம்மான்னு சோப் போட்டு சரி பண்ணி, நானும் ஒரு பத்து நாள் என்னைய தேடாதீங்கன்னு சொல்லி வேலைக்கெல்லாம் ஓபி அடிச்சுட்டு இங்க வந்தது ராத்திரியில உன் கூட உட்கார்ந்து பேசறதுக்கும், தலைகீழா ஊஞ்சல் ஆடி விளையாடிட்டு இருக்கிறதுக்கும் தானா?" என்று கேட்டு ஏக்கமாக மூச்சு விட்டவனைப் பார்த்து பொறுமையை இழந்த ஜீவா,

"டேய் முண்டம்! இங்க அவனவன் இவ்வளவு நாள் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சிருந்த காதல் மொத்தமா போச்சுன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தா இந்நேரத்திலயும் உனக்கு லவ் கேக்குதா? ரெண்டு நாளைக்கு நீ, ராசு ரெண்டு பேரும் ஒழுங்கா வால சுருட்டிட்டு எங்கூடவே இல்லன்னா கிளம்பி நான் பாட்டுக்கு சென்னைக்கு போயிடுவேன்!" என்று சொல்லி விட்டு முழங்காலை கட்டிக் கொண்டு தலையை சாய்த்து கொண்டவனிடம்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now