💟 ஜீவாமிர்தம் 54

Start from the beginning
                                    

தலையை மட்டும் தன் கணவன் புறம் திரும்பி அவனை ஏறிட்ட இனியா, "இன்னும் எத்தன தடவ தான் இதே கேள்வியை என் கிட்ட கேட்டுட்டு இருக்கப் போறீங்க மிஸ்டர் ராசு? நீங்க என்னை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணினதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு கோபம் வரத்தான் செய்யும். உங்களுக்கு புள்ள பிறந்தா அவன்ட்டயும் நீங்க செஞ்ச விஷயத்தை சொல்லி, நீயாவது உங்கப்பா மாதிரி ஒரு பொண்ணோட சம்மதம் இல்லாம அவளை ஃபோர்ஸ் பண்ற லூசுத்தனத்த பண்ணாதடான்னு சொல்லுவேன். சப்போஸ் உங்களுக்கு பொண்ணு பொறந்தா உங்கள மாதிரி வேற எவனும் அவள தோள்ல போட்டு தூக்கிட்டு போயிடாத அளவுக்கு தைரியமான பொண்ணா வளர்ப்பேன்..... மொத்தத்துல நீங்க என்ன தூக்கிட்டு போய் கல்யாணம் செஞ்சதோட தாக்கம் உங்க புள்ளைங்கள வளர்க்குற விஷயத்துல கூட தெரியத்தான் செய்யும், அப்படி  ஈஸியா எல்லாம் நீங்க செஞ்ச விஷயத்தை மறந்துட முடியாது!" என்று நமுட்டு சிரிப்புடன் சொன்னவளை கைகளில் ஏந்தி தன் அருகில் படுக்கையில் கிடத்திய ராசு,

"அதென்னடீ வார்த்தைக்கு வார்த்தை உம்புள்ள உம்புள்ளங்குற...... நீயில்லாம எம்புள்ள எங்கிட்டு இருந்துடீ வரும்...... அன்னிக்கு என்னவோ நம்ம கடையில வச்சு விடுறா மொக்கை, லூசுத்தனமா ஏதோ வேலை பார்த்துட்ட, உன்னைய மன்னிச்சுடுதேன்னு சொல்லி எனக்கு முத்தா குடுத்தியா இல்லையா? புருஷன் பொஞ்சாதியா வாழ்க்கைய ஆரம்பிக்க போறம், உம் மனசுல எந்த வெசனமும் இல்லாம சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சு கேள்விய கேட்டா உள்ளுக்குள்ள ஒண்ணு வச்சுட்டு வெளிய ஒண்ணா பேசுற? நம்ம புள்ளைகளுக்கு ஊர்க்குசும்பு, நாம வுடுற லந்து, நம்ம செய்யுத அலப்பறை இதெல்லாம் கொஞ்சம் தலைகாட்டதேன் செய்யும், ஏன்னா அம்மை ரொம்ப அப்புராணி, ஆனா அப்பன் சரியான எடக்குநாட்டான்ல..... நீ தான் மூணையும் மேய்ச்சு கண்ணுக்குள்ள வச்சு பத்திரமா பார்த்துக்கிடணும்! கொஞ்சம் தெடமா இருந்தன்னா உன்ட்ட நாலு புள்ள கேக்கலாம், நீ ரெண்டு பெத்துபோடவே ஒண் குறுக்கு செத்துடும் போல.... அதேன் எந்த புள்ளையா இருந்தாலும் ரெண்டு போதும்!" என்று சொல்லி விட்டு அவள் தோள் வளைவில் முகம் புதைத்தவனிடம் ஒத்துழையாமல்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now