💟 ஜீவாமிர்தம் 39

Start from the beginning
                                    

அவளது தந்தையுடன் உள்ளே வந்த ராகவ் தன் அண்ணியின் அன்னை தந்தை இருவரிடமும், "தயவுசெஞ்சு பார்ஷியாலிட்டி காட்டி எந்த குழந்தையையும் ஒதுக்குற தப்பை இனிமேலாவது செய்யாதீங்க ஸார்; மூத்த பொண்ணை நீங்க எம்பொண்ணுங்குறீங்க; கடைசி பொண்ணை உங்க வொய்ப் அவங்க பொண்ணுங்கிறாங்க! அப்போ எங்கண்ணி இனிமே எங்க அப்பாவுக்கு பொண்ணா இருக்கட்டும். எங்கண்ணிக்கு நீங்க டிசர்விங் பேரண்ட்ஸ் இல்ல ஸார்! நீங்க வரலைன்னு ஒரு குறையோட அவங்களோட மேரேஜ் டே இருக்க வேண்டாம்ன்னு நான் நினைச்சேன். அவங்க மனசுல இவ்வளவு நாள் அழுத்தி வச்சிருந்ததை எல்லாம் உங்க கிட்ட கேக்கவும் செஞ்சுட்டாங்க, இனிமே கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருப்பாங்கன்னு நினைக்கிறேன். பங்ஷனுக்கு வந்ததுக்கு சுப்பிரமணியம் ஸாருக்கும் உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ்! அண்ணி உங்கள பாகி காணும்னு தேடிட்டு இருப்பான், வாங்க போகலாம்!" என்று சொல்லி விட்டு அறைக்குள் இருந்து வெளியே சென்று விட்டான் ராகவ். 

"சாப்பிட்டுட்டு கிளம்பும்மா.....இப்பவும் பணத்திமிர்ல நக்கல் பண்றான்னு சொன்னீன்னா அப்படியில்லன்னு மட்டும் தான் என்னால சொல்ல முடியும்!" என்று சொல்லி விட்டு போய் விட்டாள் அபிநயா.

"எங்கடீ போயிட்ட......ரொம்ப நேரமா ஆளைக் காணும்; கோட்சூட் அதுக்கு மேல மாலை, கழுத்துல நாலஞ்சு செயின்......எப்படா இதெல்லாம் தூக்கி போட்டு அக்கடான்னு உட்காருவோம்னு இருக்கு. வா சரஸ் கிட்ட, தாத்தா பாட்டி  கிட்ட எல்லாம் ப்ளசிங்ஸ் வாங்கிக்கலாம்!" என்று அழைத்தவனிடம்,

"எனக்கு ஸாரி, ஜ்வல்ஸ் எல்லாம் லைட் வெயிட்டா தான் இருக்கு கவி! நீங்க சொன்ன மாதிரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் வேணும்ன்னு தோணுச்சு, அதான் ரூமுக்கு போயிட்டு வந்தேன்!" என்று சொன்னவள் தன் கணவனுடன் சேர்ந்து சென்று சரஸ்வதி, ஜெயந்தன், பத்மா, அர்ஜுன், மீரா, பலராம், கீதா, ஜெய்நந்தன், நிர்மலா அனைவரிடமும் ஆசி பெற்றுக் கொண்டாள்.

பெரியவர்கள் முடித்ததும் மணமக்களை கவிப்ரியா, ஷைலஜா, ராகவ் மூவரும் பிடித்து கொண்டனர். அவர்கள் தங்களது ரகளைகளை ஆரம்பிக்க பார்கவ் அவர்களை பார்த்து கெஞ்சல் குரலில்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now