💟 ஜீவாமிர்தம் 33

Start from the beginning
                                    

பதிமூன்று, பதினான்கு வயதில் இருந்து கல்லூரி மாணவிகள் வரை பதினைந்து பேர் கொண்ட ஒரு பட்டாளம் அங்கே நின்று கொண்டு இருந்தது.

"ஏய் ரூபி பாலை கண்டுபிடிக்க முடியலையாம். உனக்கு என்னடீ பட்டு இவ்வளவு கோபம்? ஒரு வாரமா நானும், பெரியப்பாவும் உன்னை கொஞ்சி கெஞ்சிப் பார்த்துட்டு இருக்கோம். ரொம்ப தான் பண்ற!" என்று அவள் கைகளைப் பற்றி சமாதானம் செய்து கொண்டு இருந்த இனியாவிடம்,

"இன்னிக்கு 4th சண்டே; புல்டேவும் என் கூட ஸ்பெண்ட் பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்க, நடுவுல ஏதாவது வொர்க் முடிக்கணும்; உன் ஹப்பி போன் பண்றாங்கன்னு சொல்லிட்டு எழுந்திரிச்சு ஓடுன..... கொன்னுடுவேன் பார்த்துக்க. டேய் ஷ்யாம்.... ஆன்ட்டி எல்லாருக்கும் ஜீஸ் குடுத்து விட்டுருக்காங்க பாரு. நீ தான் குட்டி பையன், ஸோ அக்கா அண்ணாவுக்கு எல்லாம் ஜீஸ் எடுத்து குடு. பால் இன்னிக்கு ரொம்ப தூரமா கார் போற ரோடு வரைக்கும் போயிடுச்சுன்னு நினைக்கிறேன். தேடி எடுத்துட்டு வர்றவங்க அடுத்து பேட்டிங் பண்ணலாம் போ. நீ எங்க எழுந்திரிக்கிற என் கூட இருடீ லட்டு!" என்று தன் தோழியின் சகோதரனை வேலைக்கு ஏவி விட்டு இனியாவை தன்னுடன் அமர்த்தி கொண்டு விட்டாள் ஷைலஜா.

"எக்ஸ்க்யூஸ் மீ மிஸ் ஷைலஜா....!" என்று உரக்கக் கூப்பிட்டு அவள் முன்னால் வந்து நின்றவனிடம்,

"ஹாய் மிஸ்டர்......" என்று சொல்லி விட்டு நெற்றியை தடவி யோசித்தாள் ஷைலஜா.

"பவின்டீ எருமை.... பெயரை கூட மறந்து போன மாதிரி நடிக்காத!" என்று ஷைலஜாவின் காதில் முணுமுணுத்து விட்டு புன்னகையுடன் அவன் புறம் திரும்பி,

"ஹலோ மிஸ்டர் பவின்; வெல்கம்! நீங்க இன்னிக்கு வருவீங்கன்னு பெரியப்பா நேத்தே எங்க கிட்ட சொன்னாங்க, ஆனாலும் இவ தான் கேக்காம சண்டே.... கிரிக்கெட்ன்னு இழுத்து வச்சு.... வீ ஆர் ஸாரி! நீங்க உள்ளே போங்க, நாங்க வந்துடுறோம்!" என்று சொன்ன இனியாவிடம் புன்னகையுடன் பதில் வணக்கம் தெரிவித்தவன்,

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now