ஆனால் இனியா அதைக் கண்டு கொள்ளாமல், அவனுக்கு எதிராக அமர்ந்து கொண்டு, "வீடும், கடையும் ரெண்டு தெரு தாண்டி தானே; வீட்ல சும்மா இருந்தேன். அதான் இங்க வந்தேன். உங்க கிட்ட சில கேள்வி கேக்கலாமா? ஏன் என்னை ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க...... இது தப்புன்னு உங்களுக்கு தோணலையா? என்னை பலவந்தப்படுத்தி ரிலேஷன்ஷிப் ஏற்படுத்திக்கணும்னு உங்களுக்கு என்ன அவசியம் வந்தது? உங்களை எனக்கு பிடிக்குது. ஆனா திரும்ப திரும்ப மனசுக்குள்ள நீங்க செஞ்ச தப்பு தான் நியாபகம் வருது. என் நிலைமையில உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது ஒரு பொண்ணை வச்சு யோசிச்சு பாருங்க. இது எவ்வளவு பெரிய விஷயம்னு உங்களுக்கு புரியும்!" என்றாள் இனியா சற்று குரலை உயர்த்தி.
உதடுகளை பற்களால் அழுத்திப் பிடித்திருந்தாள். மார்பு மேலும் கீழும் ஏறி இறங்கியது. கண்களில் நீர் விழவா வேண்டாமா என்று எட்டிப் பார்த்து நின்று கொண்டு இருந்தது. அவள் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவன் அவளையும் சேரில் இருந்து எழுப்பி மெதுவாக அணைத்துக் கொண்டு அவள் விழிநீரை அவன் விரல்களால் விரட்டினான்.
இனியாவிற்கு அவனது அணைப்பு ஏனோ புதிதாக தோன்றவில்லை. அவனிடம் நியாயம் கேட்டுக் கொண்டு இருந்தவள் அவனையே பற்றுக்கோடாகவும் ஆக்கிக் கொண்டாள். மெல்லிய விசும்பலில் அவள் உடல் சற்று அதிர்வுறவும்,
"ஏட்டி சிட்டு...... வேணாமுடீ, என்னைய அழ வை. நான் தானே தப்பு செஞ்சேன்......... தயவு செஞ்சு நீ அழாதடீ! நெஞ்செல்லாம் வலிக்குது!" என்றான் ராசு. அவன் அணைப்பில் அவளைப் பத்திரமாக பொத்தி வைத்துக் கொண்டு அப்படியே நின்று விட்டான்.
"உங்க கிட்ட கேள்வி கேட்டேன், உங்க ஆறுதல் எல்லாம் கேக்கல! என்னை விடுங்க ப்ளீஸ்!" என்றாள் இனியா சற்று திமிறிக் கொண்டு.
"என் பொஞ்ஜாதியோட வாசம் எனக்கு வேணுமுடீ..... குடுக்க மாட்டேன்னு அடம் பிடிச்ச; அப்புறம் நான் என் மனசுல இருக்கிறதையெல்லாம் சொல்ல மாட்டேன்! அங்கண பெஞ்சில வந்து உட்காரு. எவ்வளவு நேரம் இப்படி நின்னுட்டு இருப்ப.....!" என்று அவன் சொல்ல ஒரு பெஞ்ச்சில் இருவரும் இணைந்து அமர்ந்தனர்.
![](https://img.wattpad.com/cover/188151449-288-k437326.jpg)
YOU ARE READING
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Romanceபூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்...
💟 ஜீவாமிர்தம் 27
Start from the beginning