💟 ஜீவாமிர்தம் 2

Mulai dari awal
                                    

"நல்லா தான் ஜீவானந்தன்னு தேடி தேடி பேர் வச்ச ரகு பாட்டா, இவன் லைஃப்ல ஆனந்தமே இருக்காது, பேர்லயாவது இருக்கட்டும்ன்னு நினைச்சியா?" என்று தன் பாட்டனை நினைத்து கொண்டு இருந்தவன் நினைவில் அந்த பொல்லாத விடுமுறை நாள் வந்தது.

ஜெய் நந்தனின் அன்னை ஸாகரியின் மறைவுக்குப் பின்னர் ரகுநாதரும், ஜானகி தேவியும் மனதளவில் மிகவும் நொந்து ஓய்ந்து போய் விட்டனர். எண்பத்தைந்து அகவையை கடந்து தாங்கள் வாழும் பொழுது இளைய தலைமுறையில் தங்கள் மூத்த மருமகளை பிரிந்தது இருவராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் விதி எப்பொழுது முடிகிறதோ அப்போது தானே ஒவ்வொருவரும் செல்ல வேண்டும் என்று மனதை தேற்றிக் கொண்டு தங்கள் பேரனுக்கும் தைரியம் அளித்து இனி பூம்பாறையை விட்டு வெளியே எங்கும் வரப் போவதில்லை, நல்ல நாட்கள் கிழமைகளில் அனைவரும் சேர்ந்து பூம்பாறைக்கு வந்து செல்லுங்கள் என்று சொல்லி முடித்து விட்டார் ரகுநாதர்.

தன் பேரனின் ஏக்கத்தை சற்று போக்க நினைத்தாரோ, மகனும், மருமகளும் இல்லாத நிலையில் ஆனந்த ஸாகரத்துக்கு செல்ல மனமில்லாமல் ஒதுங்கிக் கொண்டாரோ தெரியவில்லை. ஆனால் ஸாகரியையும் இழந்து நின்ற பிறகு ஜெய் நந்தன் அவனுடைய ரகு, ஜானு மேல் கொண்ட பாசம் இன்னும் வலுவடைந்து விட்டது.

தன் தாத்தா சத்தமாக தும்மினால் கூட அவர் அருகில் சென்று நின்று விடுவான். ஆனால் ரகுநாதருக்கு தன் பேரனை விட பேரனின் மகனிடம் தான் பிரேமை அதிகம். தன் பரிசாக ஜீவாவிற்கு ஒரு ஹாண்டி காமிராவை பரிசளித்து முக்கியமான நிகழ்வுகளை பத்திரமாக பிடித்து வைத்து கொள் என்று சொல்லி இருந்தார்.

ஜீவாவும் சளைக்காமல் தன் பாட்டி, பாட்டா, அத்தை, மாமா, தந்தை, தாய், தங்கை, மாமன் மகள் மரிக்கொழுந்து, ராம் மாமா மகன்கள் பார்கவ், ராகவ் இவர்கள் அனைவரும் செய்த கலாட்டாக்கள், சண்டை, குறும்புகள், சேட்டைகள், வீட்டில் நடந்த ஒவ்வொரு விசேஷங்கள் அனைத்தையும் பத்திரப்படுத்தி நினைவுகள் கூடவே இருக்கும் வகையில் தன்னுடன் வைத்திருந்தான்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Tempat cerita menjadi hidup. Temukan sekarang