இப்போது ஆனந்த ஸாகரத்தில் ஆனந்தனும் இல்லை, ஸாகரியும் இல்லை. பூம்பாறையில் ரகுநாதரும் இல்லை, அவரது மனைவி ஜானகி தேவியும் இல்லை. தனது அம்மா, தாத்தா, பாட்டி மூவரின் இழப்பையும் ஒருவழியாக ஜீரணம் செய்து கொண்ட ஜெய்நந்தன் தனது குடும்பத்தினருடன் ஆனந்த ஸாகரத்தில் நித்திய கவலையுடன் வசித்து வந்தார். அவரது கவலைக்கு காரணமானவன் நம் கதையின் நாயகன் ஜீவானந்தன்...... ஜெய்நந்தனின் புதல்வன்!
"ஆரத்தி எடுத்துக்கோங்க அப்பா!" என்று சொன்னவளை கண்கள் நிறைய பார்த்துக் கொண்டு நின்றிருந்தவரை,
"அப்ப்ப்ப்பா.......என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க....?" என்ற மகளின் உலுக்கல் தன்னிலைக்கு கொண்டு வந்தது.
"ஸாரிடா ரூபி; ஏதோ யோசனை, உன் ஸாங் வழக்கம் போல சூப்பர்....! சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சிட்டன்னா காலேஜ்ல டிராப் பண்ணிடுவேன்!" என்று சொன்ன தன் தந்தையிடம்,
"இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா கிளம்பணும்ப்பா! இன்னும் 20 நிமிஷத்துல ரெடியாகிட்டு வந்துடுறேன்! கிளம்பலாம்!" என்று சொன்ன ஷைலஜா தன் தோழி இனியாவை கல்லூரிக்கு கிளம்பி இருக்குமாறு இண்டர்காமில் சொல்லி விட்டு தன் ரூமிற்கு சென்றாள். ஷைலஜா கொடைக்கானலின் பிரபல கல்லூரியில் மூன்றாம் ஆண்டு புள்ளியியல் படிப்பில் இருக்கிறாள்.
இனியா பிஎஸ்சி நர்ஸிங் மூன்றாவது ஆண்டில் இருப்பவள். விவேக்கின் மகள்; ஷைலஜாவின் தளிர் நடை வயதிலேயே தனது கைகளுக்குள் அவள் கையை கோர்த்து கொண்ட இறுக்கமான கோந்து, பிசின் என்றும் சொல்லலாம். சங்க காலமாக இருந்திருந்தால் கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையார் என்றும் சொல்லலாம்! மொத்தத்தில் இருவரும் நல்ல தோழிகள்.
YOU ARE READING
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Romanceபூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்...
💟 ஜீவாமிர்தம் 1
Start from the beginning