"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!" என்று பூஜையறையில் நின்று பாடிக் கொண்டு இருந்த தன் மகள் ஷைலஜாவிடம் தன் அன்னை ஸாகரியின் பிரதிபிம்பத்தை பார்த்து கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.
திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீ ரகுநாத பூபதி அவர்கள் மலை வாசம் பிடித்துப் போய் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறையை தன் இருப்பிடமாக மாற்றிக் கொண்டு, அந்த சிறிய ஊருக்குப் பண்ணையாராகவும் ஆகி விட்டார்.
அவரது மகன் ஆனந்தன், ஸாகரி என்ற பெண்ணை அவரது சம்மதம் இல்லாமல் காதலித்து மணந்து கொள்ள ஆனந்தனுக்காக ரகுநாத பூபதி ஒதுக்கித் தந்தது தான் இப்போது கொடைக்கானலில் இருக்கும் ஆனந்த ஸாகரம் எஸ்டேட்! வெறும் மலைப்பாறையாக இருந்த நிலம் ஆனந்தன் மற்றும் ஸாகரியின் கடுமையான முயற்சி, உழைப்பு மற்றும் நிறைய நில ஆய்வுகளால் ஆனந்த ஸாகரம் எஸ்டேட்டாக வடிவெடுத்திருந்தது. அவ்வளவு பெரிய இடத்தில் வீட்டை ஒருவழியாக நிர்மாணித்தவர்கள், அன்றாட தொழில் படுதலுக்கு என்ன செய்வது என்று யோசித்து
இருபது நிமிட பயணத்தில் ஒரு தேயிலை பாக்டரியையும் வங்கிக்கடன் மற்றும் ஆனந்தனின் முந்தைய வேலையால் கிடைத்த பணத்தைப் பயன்படுத்திக் கொண்டு மெது மெதுவாக வளர்ச்சிப் பாதையில் செல்ல தொடங்கினர்.ஆனந்தன், ஸாகரியின் மகன் ஜெய்நந்தன் ஆனந்த ஸாகரத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவர்களுடைய வளர்ச்சி அசுர வேகத்தில் தான் இருந்தது. தனது இல்ல வளாகத்திலுள்ள காலி இடத்திலேயே எஸ்.ஜே.என் காம்ப் ஷொல்யூஷன்ஸ் என்ற கம்ப்யூட்டர் கம்பெனியை துவங்கி அவர் தன்னுடைய கனவு வேலையையும், குடும்ப பொறுப்புகளையும் திறம்பட நிர்வகித்தார். காதல் மனைவி நிர்மலாவும், அவரது உடன்பிறவா சகோதரன் விவேக்கும் அவருக்கு உதவியாக இருக்க இப்போது பூம்பாறையில் இருக்கும் தனது சித்தப்பா, சித்திக்கும் நினைத்த நேரம் ஜெய்நந்தனால் எந்தவிதமான உதவிகளையும் செய்ய நேரம் இருந்தது.
YOU ARE READING
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Romanceபூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்...