🌻 அழகி 91

223 10 1
                                    

ஜனமேஜயன் பர்வதவர்த்தினி திருமணம் முடிந்து ஒருவார காலம் ஆகி விட்டது. ஜெயனும் காய்ச்சலில் இருந்து நல்லபடியாக தேறி எழுந்து உற்சாகமாக நடமாடத் தொடங்கி விட்டான். அன்று காலையிலேயே எக்ஸர்சைஸ் முடித்து, ஷேவிங் செய்து கொண்டிருந்தவன் மாடியில் செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தவளிடம்,

"ஓய்.... ஹெட்லைட்டு! வர்றியா சேந்து குளிப்போம்!" என்று கேட்டு கண்சிமிட்டினான்.

"சேந்து சாப்டணும், சேந்து படுக்கணும்னு சொல்றது ஓகே வீட்டுக்கார்.... சேந்து குளிக்கணும்னு கூப்டுறது மட்டும் நல்ல ஐடியாவா தெரியலயே?" என்று சொல்லி சிரித்தாள் வதனி.

"என்னடீ நல்ல ஐடியாவா தெரியல? நானே பாவம்.... காய்ச்சல்ல கெடந்து இத்தன நாள வேஸ்ட் பண்ணிட்டமே அத எப்டிறா சரிக்கட்டுறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்! ஒரு வேலையில டச் விட்டுப் போயிடுச்சுன்னா அத மறுபடியும் செய்யுறப்ப கொஞ்சம் முழிக்குற மாதிரி இருக்கும். அப்டி எல்லாம் ஆகலாமா சொல்லு?" என்று கேட்டவனின் அருகில் வந்தவள்,

"யாரு நீயா வேல தெரியாம முழிக்குறவன்? இப்ப செய்யுற வேலையில ஒழுங்கா கவனமா இருந்து செஞ்சு முடி. ஒன்னோட கன்னத்துல மார்க் போடுறதுன்னா அது நானா மட்டுந்தான் இருக்கணும்! ஏதாவது கனவு கண்டுக்கிட்டே ஷேவ் பண்ணி கன்னத்த கிழிச்சு வச்சுருக்குற மாதிரி இப்ப மூக்க கிழிச்சுக்காத! அது அதுக்கு ஒரு நேரம் இருக்கு..... டச் விட்டுப் போன வேலையெல்லாம் ராத்திரில வந்து கவனி!" என்று தன் கணவனிடம் சொல்லி அவன் நெற்றி முடியை கலைத்து விட்டு கீழே சென்றாள் வதனி.

ஒரு வாரமாக அவன் உடம்பு வலியென்று சொல்லி
அசதியாக படுத்து படுத்து கிடந்த போது முன்பு முகிலை எவ்வாறு அக்கறையாக கவனித்துக் கொண்டாளோ அவ்வாறே இப்போது ஜெயனையும் கவனித்துக் கொண்டாள். காலையிலும் இரவிலும் வதனி அவனை கவனித்துக் கொள்ள மதியத்தில் தன் மகனை முகிலமுதம் கவனித்துக் கொண்டார்.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த முதல் நாள் இரவில் அவளிடம்,

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now