🌻 அழகி 22

215 12 1
                                    

ஐந்து நிமிடங்கள் ஆன பிறகு நஸாரும், ஜெயனும் அந்த மனிதரும் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வதனியும் சென்றாள். அந்த மனிதருக்கு ஏதோ ஒரு தேவை இருக்கிறது என்ற உந்துதல் அவளை அந்த இடத்தில் சென்று நிப்பாட்டியிருந்தது.

"நஸார் ஸார்.... இவருக்கு என்ன வேணுமாம்? ஏன் இப்டி தயங்கி நிக்குறாரு?" என்று கேட்டாள் வதனி.

"ஹா....ன்! இவருக்கு உடனே கைமாத்தா ரெண்டாயிர ரூபா காசு வேணுமாம்! என் பின்பாக்கெட்ல கைய உட்டு, அவருக்கு வேணுங்குற காச அவரே என் பர்ஸ்ல இருந்து எடுத்துக்குவோம்னு நெனச்சாராம். நீங்க எங்க பாக்கெட்ல கைய உட்டு தொழாவிட்டு இருக்குறத பாத்துக்கிட்டு வெரல் சப்பிட்டு இருக்குறதுக்கு நாங்க ஒண்ணும் சின்னப்பசங்க இல்லய்யா; எங்களுக்கு தாடி மீசையெல்லாம் மொளச்சிடுச்சின்னு இவர் கிட்ட அன்பா சொல்லி, நஸார் கடையில போய் இருங்க; நாங்க உங்கள அங்க வந்து வச்சுக்குறோம்னு சொல்லி அனுப்புனோம். வேறெங்கயும் ஓடுனா எங்க நம்மள பின்னாலயே வந்து புடிச்சு கெரண்டக்கால் நரம்ப அத்துப்புடுவானுங்களோன்னு பயந்து, தல கரெக்டா நாம சொல்லியனுப்புன மாதிரி இங்க வந்து நின்னுருகாப்ல...... இப்ப சொல்லு; இவருக்கு உங்காச குடுப்பியா நீயி?" என்று அவளிடம் கேட்டான் ஜெயன்.

"கண்டிப்பா குடுப்பேன்..... அவரோட தேவை நியாயமானதா இருந்தா, நான் நிச்சயமா அவருக்கு ஹெல்ப் பண்ணுவேன்!" என்று ஜெயனைப் பார்த்தபடி அவனிடம் சொன்னாள்  வதனி.

"இங்கரு.... நான் உங்கிட்ட என்ன சொல்லிட்டு இருந்தேன்னு உனக்கு தெளிவா புரிஞ்சதா இல்லையாம்மா? டீக்கடையில நின்னுட்டு இருக்கும் போது இந்த பெரிய மனுஷரு என் பர்ஸ்ல இருந்த ஒன்னோட பணம் மொத்தத்தையும் அப்டியே ஆட்டைய போடத் தெரிஞ்சாருடீ!" என்று சற்றே பதட்டத்துடன் மறுமுறை சொன்ன ஜெயனிடம்,

"ஏய்.... எனக்கென்ன கேக்குறதுல பிரச்சனையா? மொதல் தடவையிலேயே நீ சொன்னது தெளிவா தான் புரிஞ்சது எனக்கு; இவர் உங்கிட்ட திருட வந்தாரு; நீங்க ரெண்டு பேரும் சேந்து அவர வார்ன் பண்ணி நஸார் ஸார் கடைக்கு அனுப்பி வச்சீங்க..... அதான் அங்க வந்தப்போ ஒரு மாதிரி பயந்து போய் வந்தாரா? நீ அடிச்சியா இவர?" என்று அவன் கண்களை நேர்ப்பார்வை பார்த்து அவனிடம் கேள்வி கேட்டாள் வதனி.

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now