🌻 அழகி 28

284 14 8
                                    

அப்பாவை இழந்த போது அமுதாம்மா கதறிய கதறல் இவளுடைய புலம்பலைப் போலவே தான் வலித்தது; இருந்தாலும் இதுவரை மரணத்தை வென்ற மனிதர் என்று எவருமே இல்லையே என்று நினைத்தவன் ஒரு பெருமூச்சுடன் தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த பொரியுடன் சிறிது எள்ளையும் கலந்து அவளுடைய கையில் வைத்திருந்த குவளையில் கொட்டினான்.

"வர்த்தினி! வெறும் சாதமுன்னா அத மீன் சாப்புடாது; அதுனால வீட்ல இருந்து கொண்டு வந்த பொரியோட சாதத்த கலந்து வச்சுருக்கேன். தண்ணிக்குள்ள இறங்கி இத மீனுக்கு சாப்புட போடு!" என்றான்.

"நான் வினுவுக்கும், அம்மாவுக்கும் தான் சாப்பாடு கொண்டு வந்தேன் ஜெயன்; அத எதுக்கு நான் மீனுக்கு கொண்டு போய் போடணும்? அதெல்லாம் நான் செய்ய மாட்டேன். நான் என்ன செய்யணும்னு நீ எனக்கு ஒண்ணும் இன்ஸ்ட்ரக்ஷன் குடுக்க வேண்டாம்; இங்கருந்து போய்த் தொலங்குறேன்! உனக்குப் புரியுதா இல்லையா?" என்று என்றைக்கும் இல்லாத அளவிற்கு அதிகமான டெஸிபலில் அவனிடம் கத்தியவளிடம்,

"ம்ஹூம்! இது வேலைக்காகாது! ஒங்கிட்ட வாதம் பண்ணிட்டே நின்னுக்கிட்டு இருக்குறது எனக்கு எரிச்சலா இருக்கு! கையில வச்சு இருக்குறத கொஞ்சம் பத்திரமா புடிச்சுக்க!" என்றவன் அவளை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன்னுடைய தோளில் கிடத்திக் கொண்டு தண்ணீருக்குள் இறங்கியிருந்தான்.

"ஜெயன்; என்னை கீழ விடு......! நீ இப்ப என்னை எறக்கி விடலன்னா நான் கத்துவேன்!" என்றவளிடம்,

"வாய் வலிக்குற வரைக்கும் கத்து! ஒன்னைய காப்பாத்துறக்கு இங்க ஒரு பக்கியும் வராது! நான் தப்பானவன் இல்லங்குறது நம்ம பெரிசுக்கு தெரியும்! அதுனால அவரும் இங்க வந்து நிக்கப் போறதில்ல!" என்றவன் அவளுடைய திமிறலையும், முதுகில் மார்பில் அவள் அடித்த அடிகளையும் துளியும் கண்டு கொள்ளாமல் தண்ணீரில் மெல்ல நடந்து வந்து அவளை இடுப்பளவு நீரில் நிற்க வைத்திருந்தான்.

"நான் வெளிய போறேன்! என்னை விடுடா!" என்று அவனுடைய கைப்பிடிக்குள் சிக்கிய தன்னுடைய கையை விடுவிக்க முடியாமல் வலக்கையில் குவளையை வேறு பத்திரமாக வைத்திருந்தவளிடம்,

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Tempat cerita menjadi hidup. Temukan sekarang