🌻 அழகி 61

306 15 4
                                    

அன்றைய தினம் ஒரு சனிக்கிழமை. நஸார் தன்னுடைய அனைத்து பணியாளர்களுக்கும் ஒருநாள் விடுப்பு கொடுத்து விட்டு, அவனும் மரியத்துடன் வீட்டில் அமர்ந்திருந்தான்.

பாயம்மா தன்னுடைய தாய் வழி உறவுக்காரர் ஒருவரைப் பார்க்க சென்னை வரை கிளம்பிப் போயிருந்ததால் தான் நஸாருக்கு அவ்வளவு கொண்டாட்டம்.

"இங்கரு.... ரொம்ப ஆடாத!
ஒங்க அம்மி ஒரு வாரம் அங்க இருக்கப் போறேன்னு சொல்லிட்டு நாலு நாளுல திரும்பி வந்துரும் பாத்துக்க!" என்று கணவனின் சந்தோஷத்தில் மண் விழ வேண்டும் என்ற நோக்கத்திலேயே பேசிக் கொண்டிருந்தவளிடம்,

"போடீ பட்டனு.... எப்டியும் அம்மி குன்னூருக்கு திரும்பி வார வரைக்கும் நா சந்தோசமா தான்டீ இருக்கப்போறேன்!" என்று தன்னவளின் உதட்டை நசுக்கி அவள் பேச்சுக்கு தண்டனை வழங்கியபடி அவளுக்குப் பதில் சொன்னான் நஸார்.

"ஏய்..... வலிக்குது விடுடா!" என்று அவன் கையில் செல்லமாக ஒரு அடி அடித்தவள் அவனிடம்,

"நஸாரு..... ஜெயனு அண்ணாவையும், வதனியவும் இன்னைக்கு வீட்டுக்கு சாப்புட கூப்டுறியா? நம்ம புள்ளைங்க விசேசம் வச்ச அன்னைக்கு கூட அவுக ரெண்டு பேரும் இங்கண ஒத்த வாயி சாப்டல! ஒன்னோட அம்மி தான் ஊருக்குப் போயிருக்குல்ல? அவங்க ரெண்டு பேரையும் இங்க வரச் சொல்லுவேன்!" என்று ஆதங்கத்துடன் சொல்ல அவளை மென்மையான ஒரு பார்வை பார்த்தவன்,

"இதுக்குப் போயி எதுக்குடீ எங்கிட்ட பெர்மிஷனெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்குற? நீயே அவிய்ங்க ரெண்டு பேரையும் போன் பண்ணிக் கூப்டு! நம்ம ரெண்டு பேருல அவன யார் கூப்டா என்ன?" என்று கேட்டு அவளை தோளோடு அணைத்தான்.

துரியோதனனுடைய மனைவியின் இடையில் அறியாமல் கை வைத்து விட்டு வியர்த்துப் போய் நின்ற கர்ணனை விட தன்னுடைய நண்பன் ஜெயனுடைய பாடு பெரும்பாடு என்று நஸாருக்கு நன்றாகவே தெரியும்..... தப்பி தவறி எப்போதாவது அவன் இந்த வீட்டிற்கு வரும் வேளைகளில் மரியத்திடம் ஒரு பார்வையுடன் விடைபெற்று விட்டு வெளியேறி விடுவான்!

ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔Where stories live. Discover now